துர்கா ஸ்டாலின் சகோதரருக்கு தமிழக அரசு முக்கிய பதவி - மருத்துவ பணிகள் இயக்குனராக நியமனம்

தமிழக இ.எஸ்.ஐ., மருத்துவமனைகளின் கூடுதல் இயக்குனராக இருந்த துர்கா ஸ்டாலின் சகோதரர் ராஜமூர்த்திக்கு, சமீபத்தில் டி.எம்.எஸ் தர நிலையில் பதவி உயர்வு வழங்கப்பட்டது. தற்போது, மாநில மருத்துவம் மற்றும் கிராமப்புற சுகாதார சேவைகள் இயக்குநராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.


கோவை: துர்கா ஸ்டாலின் சகோதரரும், மருத்துவருமான ஜெ.ராஜமூர்த்தி டி.எம்.எஸ் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். டாக்டர் ஜெ.ராஜமூர்த்தி மருத்துவம் மற்றும் கிராமப்புற சுகாதார சேவைகள் (டி.எம்.எஸ்) இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலினின் சகோதரர் ஆவார்.

தமிழக இ.எஸ்.ஐ., மருத்துவமனைகளின் கூடுதல் இயக்குனராக இருந்த ராஜமூர்த்திக்கு, சமீபத்தில் டி.எம்.எஸ் தர நிலையில் பதவி உயர்வு வழங்கப்பட்டது. அதன்படி, தற்போது மாநில மருத்துவம் மற்றும் கிராமப்புற சுகாதார சேவைகள் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆளுநரின் ஒப்புதலுடன் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

இவர் மாநிலத்தில் உள்ள அனைத்து தாலுகா மற்றும் மாவட்ட மருத்துவமனைகளையும் கட்டுப்படுத்தி பொறுப்பு வகிப்பார். இதுவரை டி.எம்.எஸ் ஆக இருந்து வந்த டாக்டர் ஆர்.இளங்கோ மகேஸ்வரன், இவர் வகித்து வந்த டி.எம்.எஸ் இ.எஸ்.ஐ., மருத்துவமனைகள் பொறுப்புக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...