கோவையில் வளர்ச்சி திட்டப்பணிகள் - மாநகராட்சி ஆணையாளர் சிவகுருபிரபாகரன் நேரில் ஆய்வு

சங்கனூர் பள்ளம் மேம்படுத்தும் பணி, உக்கடம் பெரிய குளத்தில் மழைக்காலங்களில் உபரிநீர் வெளியேற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மதகுகளின் செயல்பாடுகள், பயணியர் நிழற்குடை அமைய உள்ள இடம் ஆகிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுருபிரபாகரன் ஆய்வு நடத்தினார்.



கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட சங்கனூர் பள்ளம் ரூ.49 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இன்று (25.06.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையாளர், மத்திய மண்டலத்திற்குட்பட்ட கண்ணப்பன் நகர், காந்திபுரம் 7-வது வீதி தொடர்ச்சி ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் சங்கனூர் பள்ளம் மேம்பாட்டு பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைவாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.



அதனைத் தொடர்ந்து, உக்கடம் பெரிய குளத்தில் மழைக்காலங்களில் உபரிநீர் வெளியேற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மதகுகளின் செயல்பாடுகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர், நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக, கோயம்புத்தூர் மாநகராட்சி, மேற்கு மண்டலம், மேட்டுப்பாளையம் சாலை பேருந்து நிலையம் எதிர்புறம் கோயம்புத்தூரில் இருந்து மேட்டுப்பாளையம் மற்றும் ஊட்டி நோக்கி செல்லும் பேருந்துகள் நின்று செல்லும் வகையில் பயணியர் நிழற்குடை அமைய உள்ள இடத்தினையும் மாநகராட்சி ஆணையாளர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



இந்த ஆய்வுகளின்போது, மத்திய மண்டலத்தலைவர் மீனாலோகு, நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் முரளி, மாநகர தலைமை பொறியாளர் அன்பழகன், மாநகர துணை தலைமை பொறியாளர் முருகேசன், மண்டல உதவி ஆணையர்கள் செந்தில்குமரன், சந்தியா, இளங்கோவன், நகரமைப்பு அலுவலர் குமார், உதவி செயற்பொறியாளர் ஹேமலதா, மண்டல சுகாதார அலுவலர்கள் குணசேகரன், ஆண்டியப்பன், உதவி பொறியாளர் சரவணகுமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.



Newsletter

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...