கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை மற்றும் முனைவர் பட்டப்படிப்பு சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

இந்த ஆண்டு முதுநிலைப் படிப்புகளுக்கு மொத்தம் 2330 விண்ணப்பதாரர்களும், முனைவர் பட்டப் படிப்புகளுக்கு 380 மாணவர்களும் தங்களின் பாட விருப்பத்தின்படி பல்வேறு திட்டங்களுக்கு விண்ணப்பித்து இன்று நடைபெற்ற முதுகலை நுழைவுத் தேர்வில் கலந்து கொண்டனர்.


Coimbatore: கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக முதுகலை பட்ட மேற்படிப்பு பயிலகம் 11 தொகுப்பு கல்லூரிகளில் 33 முதுகலை மற்றும் 28 முனைவர் பட்டப் படிப்பை வழங்குகிறது. துணைவேந்தர் கீதாலட்சுமி மே 7, 2024 அன்று வேளாண்மை, தோட்டக்கலை. வேளாண் பொறியியல், வனவியல் மற்றும் சமூக அறிவியல் சேர்க்கைக்கான இணையதளத்தினை தொடங்கினார்.

இந்த ஆண்டு முதுநிலைப் படிப்புகளுக்கு மொத்தம் 2330 விண்ணப்பதாரர்களும், முனைவர் பட்டப் படிப்புகளுக்கு 380 மாணவர்களும் தங்களின் பாட விருப்பத்தின்படி பல்வேறு திட்டங்களுக்கு விண்ணப்பித்து 23 ஜூன் 2024 அன்று நடைபெற்ற முதுகலை நுழைவுத் தேர்வில் கலந்து கொண்டனர். 



இந்த நுழைவுத் தேர்வில் ஆத்திரப் பிரதேசம், கேரண, ஈர்நாடகா, மகாராஷ்ட்ரா, ஒடிசா, மேற்கு வங்கம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், குஜராத், ஜார்கண்ட், இமாச்சல பிரதேசம், மேகாலயா, அசாம், தெலுங்கானா, புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.

இந்த தேர்வு பல்கலைக்கழகத்தின் 33 தேர்வு அரங்குகள் மற்றும் விரிவுரை அரங்குகளில் 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் 50 நிர்வாக பணியாளர்கள் மூலம் நடத்தப்பட்டது. தேர்வு நடைபெறும் பல்வேறு அரங்குகளைக் கண்டறிய கூகுள் வரைபடத்துடன் இணைக்கப்பட்ட QR குறியீடுகள், உருவாக்கப்பட்டு

காட்டப்பட்டிருந்தது.

மேற்கண்ட தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கான சேர்க்கை வரும் செப்டம்பர் 2024 இல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...