தாராபுரம் அருகே செம்மண் கடத்திய இரண்டு லாரிகள், ஜேசிபி இயந்திரம் பறிமுதல்..!

தாராபுரம் பகுதியில் அனுமதி இன்றி எந்த வகையிலும் மண் கடத்தலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தாசில்தார் எச்சரித்துள்ளார்.


Coimbatore: தாராபுரம் அருகே உள்ள அலங்கியம் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து கிராவல் மண் கடத்தப்பட்டு வருவதாக தாராபுரம் வட்டாட்சியருக்கு தொடர்ந்து தகவல்கள் வந்த வண்ணம் இருந்து வருகிறது.

இந்நிலையில் அலங்கியம் அருகில் வட்டமலை புதூர் செல்லும் சாலையில் உள்ள 3 ஏக்கர் விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக செம்மண் கடத்தப்பட்டு வந்தது தெரிய வந்தது. இதை எடுத்து தாராபுரம் வட்டாட்சியர் கோவிந்தசாமி சம்பவ இடத்திற்கு சென்று இரண்டு டிப்பர் லாரிகள் மற்றும் ஜேசிபி இயந்திரம் மண் அள்ளிக் கொண்டு இருப்பதை பார்த்தார். இதைப் பார்த்த டிப்பர் லாரி ஓட்டுநர்கள் சாவியை எடுத்துக்கொண்டு தப்பி ஓடினர்.

தாராபுரம் வட்டாட்சியர் கோவிந்தசாமி மற்றும் வருவாய் ஆய்வாளர் பாரதி, கிராம நிர்வாக அலுவலர்கள் மாரியப்பன்,சக்திவேல், நந்தகோபல், சுரேஸ் அவர்களை வைத்து இரண்டு லாரிகளையும் ஜேசிபி இயந்திரத்தை பறிமுதல் செய்து அலங்கியம் காவல் நிலையத்தில் ஒடைத்தனர். தாராபுரம் பகுதியில் அனுமதி இன்றி எந்த வகையிலும் மண் கடத்தலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தாசில்தார் எச்சரித்துள்ளார்.

Newsletter

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...