தாராபுரம் அருகே செம்மண் கடத்திய இரண்டு லாரிகள், ஜேசிபி இயந்திரம் பறிமுதல்..!

தாராபுரம் பகுதியில் அனுமதி இன்றி எந்த வகையிலும் மண் கடத்தலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தாசில்தார் எச்சரித்துள்ளார்.


Coimbatore: தாராபுரம் அருகே உள்ள அலங்கியம் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து கிராவல் மண் கடத்தப்பட்டு வருவதாக தாராபுரம் வட்டாட்சியருக்கு தொடர்ந்து தகவல்கள் வந்த வண்ணம் இருந்து வருகிறது.

இந்நிலையில் அலங்கியம் அருகில் வட்டமலை புதூர் செல்லும் சாலையில் உள்ள 3 ஏக்கர் விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக செம்மண் கடத்தப்பட்டு வந்தது தெரிய வந்தது. இதை எடுத்து தாராபுரம் வட்டாட்சியர் கோவிந்தசாமி சம்பவ இடத்திற்கு சென்று இரண்டு டிப்பர் லாரிகள் மற்றும் ஜேசிபி இயந்திரம் மண் அள்ளிக் கொண்டு இருப்பதை பார்த்தார். இதைப் பார்த்த டிப்பர் லாரி ஓட்டுநர்கள் சாவியை எடுத்துக்கொண்டு தப்பி ஓடினர்.

தாராபுரம் வட்டாட்சியர் கோவிந்தசாமி மற்றும் வருவாய் ஆய்வாளர் பாரதி, கிராம நிர்வாக அலுவலர்கள் மாரியப்பன்,சக்திவேல், நந்தகோபல், சுரேஸ் அவர்களை வைத்து இரண்டு லாரிகளையும் ஜேசிபி இயந்திரத்தை பறிமுதல் செய்து அலங்கியம் காவல் நிலையத்தில் ஒடைத்தனர். தாராபுரம் பகுதியில் அனுமதி இன்றி எந்த வகையிலும் மண் கடத்தலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தாசில்தார் எச்சரித்துள்ளார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி முதுநிலை மாணவிகளுக்கு ஒருங்கிணைப்பு விழா நடைபெற்றது

Coimbatore மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் முதுநிலை மாணவிகளுக்கான ஒருங்கிணைப்பு விழா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் தொடர் மழையால் அமராவதி அணையின் நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 29.99...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு தென்மேற்கு பருவமழையால் அதிக நீர்வரத்து ஏற்பட்டுள...

கிணத்துக்கடவில் ஜூலை 23-24ல் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: கோவை மாவட்ட ஆட்சியர் நேரில் மனுக்கள் பெறுகிறார்

கிணத்துக்கடவு வட்டத்தில் ஜூலை 23-24 தேதிகளில் மாவட்ட ஆட்சியர் பவன் குமார்  தலைமையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்...

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...

ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக...