கோவையில் தலைக்கவச சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

கோவை அவிநாசி ரோட்டில் தலைக்கவச பாதுகாப்பு விழிப்புணர்வு வாகனப் பேரணி இன்று தொடங்கியது. கிராந்தி குமார் பாடி மற்றும் வி. பாலகிருஷ்ணன் ஆகியோர் பேரணியை தொடக்கி வைத்தனர்.


கோவை: கோவையில் எக்ஸ்பிரஸ் ஹீரோ ரைடு சேப் இந்தியா என்ற பெயரில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம், ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்துடன் இணைந்து நடத்திய தலைக்கவச சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு வாகனப் பேரணி கோவை அவிநாசி ரோட்டில் இன்று (ஜூன்.20) நடைபெற்றது.

3 நாள் நடைபெறும் இந்நிகழ்ச்சியை கோவை மாவட்ட ஆட்சியர்கிராந்தி குமார் பாடி, கோவை மாநகர் காவல் ஆணையர் வி. பாலகிருஷ்ணன் ஆகியோர் தொடக்கி வைத்தனர். 



மேலும் இந்நிகழ்ச்சியில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் – ஹீரோ மோட்டோ கார்ப் இணைந்து நடத்தும் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு இயக்கத்தைக் கோவை மாநகர் காவல் ஆணையர் வி. பாலகிருஷ்ணன், சென்னை சில்க்ஸ் – குமரன் தங்க மாளிகை தலைவர் டி.கே. சந்திரன், எஸ்என்ஆர் சன்ஸ் அறக்கட்டளை இணை நிர்வாக அறங்காவலர் ஆர். சுந்தர், டாக்டர் முத்து மருத்துவமனை தலைவர் டாக்டர் முத்து சரவண குமார் ஆகியோர் பங்கேற்றனர்.



இந்நிகழ்வு கோவை அவிநாசி, இராமநாதபுரம் போன்ற மாநகரின் முக்கிய சாலைகளில் இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.



இதில் பங்கேற்றவர்கள் மற்றும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு இலவச தலைக்கவசம் வழங்கப்பட்டது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சனிக்கிழமை வரை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...