கோவையில் தலைக்கவச சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

கோவை அவிநாசி ரோட்டில் தலைக்கவச பாதுகாப்பு விழிப்புணர்வு வாகனப் பேரணி இன்று தொடங்கியது. கிராந்தி குமார் பாடி மற்றும் வி. பாலகிருஷ்ணன் ஆகியோர் பேரணியை தொடக்கி வைத்தனர்.


கோவை: கோவையில் எக்ஸ்பிரஸ் ஹீரோ ரைடு சேப் இந்தியா என்ற பெயரில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம், ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்துடன் இணைந்து நடத்திய தலைக்கவச சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு வாகனப் பேரணி கோவை அவிநாசி ரோட்டில் இன்று (ஜூன்.20) நடைபெற்றது.

3 நாள் நடைபெறும் இந்நிகழ்ச்சியை கோவை மாவட்ட ஆட்சியர்கிராந்தி குமார் பாடி, கோவை மாநகர் காவல் ஆணையர் வி. பாலகிருஷ்ணன் ஆகியோர் தொடக்கி வைத்தனர். 



மேலும் இந்நிகழ்ச்சியில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் – ஹீரோ மோட்டோ கார்ப் இணைந்து நடத்தும் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு இயக்கத்தைக் கோவை மாநகர் காவல் ஆணையர் வி. பாலகிருஷ்ணன், சென்னை சில்க்ஸ் – குமரன் தங்க மாளிகை தலைவர் டி.கே. சந்திரன், எஸ்என்ஆர் சன்ஸ் அறக்கட்டளை இணை நிர்வாக அறங்காவலர் ஆர். சுந்தர், டாக்டர் முத்து மருத்துவமனை தலைவர் டாக்டர் முத்து சரவண குமார் ஆகியோர் பங்கேற்றனர்.



இந்நிகழ்வு கோவை அவிநாசி, இராமநாதபுரம் போன்ற மாநகரின் முக்கிய சாலைகளில் இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.



இதில் பங்கேற்றவர்கள் மற்றும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு இலவச தலைக்கவசம் வழங்கப்பட்டது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சனிக்கிழமை வரை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பிட்காயின் டிரேடிங் மூலம் ரூ.27.45 லட்சம் மோசடி, 5 பேர் கைது - கோவை சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

பிட்காயின் மற்றும் ஆன்லைன் டிரேடிங் பெயரில் ரூ.27.45 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஐந்து பேரை கோவை மாநகர சைபர் கிரை...

கோவை அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து; பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் சேதம்

கோவை அருகே சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் பிளாஸ்டிக் குடோனில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், பிளாஸ்டிக் பொருட்...

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...