கோவை ஆர்.எஸ்.புரத்தில் மாமனார் வீட்டுக்கு தீ வைத்த மருமகன் கைது

கணவருடன் சோ்ந்து வாழ தனக்கு விருப்பமில்லை எனவும், நீதிமன்றம் மூலம் விவாகரத்து வழக்குத் தொடர உள்ளதாகவும் போலீசாரிடம் மனைவி கூறியதால், ஆத்திரமடைந்த கணவர், மாமனார் வீட்டுக்கு தீ வைத்துள்ளார். இதனையடுத்து மருமகனை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவை ஆா்.எஸ்.புரம், மீனாட்சி நகா் பகுதியைச் சோ்ந்தவா் ராதாகிருஷ்ணன் (60), ஆட்டோ ஓட்டுநா். இவரது மகளுக்கும், வேடப்பட்டி வி.டி.எஸ். நகரைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் மதன்ராஜ் என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா்.

இந்நிலையில் மதன்ராஜூக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதேபோல, இருவருக்கும் இடையே திங்கள்கிழமை ஜூன்.17ம் தேதி மீண்டும் தகராறு ஏற்பட்டதையடுத்து, மதன்ராஜ் மீது அவரது மனைவி தொண்டாமுத்தூா் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தியபோது, மதன்ராஜூடன் சோ்ந்து வாழ தனக்கு விருப்பமில்லை எனவும், நீதிமன்றம் மூலம் விவாகரத்து வழக்குத் தொடர உள்ளதாகவும் மனைவி கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மதன்ராஜ், மீனாட்சி நகரில் உள்ள மனைவியின் தந்தை ராதாகிருஷ்ணன் வீட்டுக்கு சென்று வீட்டின் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

இதைப் பார்த்த அருகிலிருந்தவா்கள் தீயை அணைத்தனா். அதற்குள் வீட்டின் முன்பகுதியில் இருந்த சில பொருள்கள் மற்றும் வீட்டின் முன்பக்க கதவு ஆகியவை தீயில் சேதமடைந்தன. பின்னர் இதுகுறித்து ராதாகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில், ஆா்.எஸ்.புரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, ஆட்டோ ஓட்டுநா் மதன்ராஜை நேற்று ஜூன்.19 கைது செய்தனா்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...