புல்லுக்காடு பகுதியில் தூய்மைப் பணியாளர்களுக்கு மனிதநேய மக்கள் கட்சி மாமன்ற உறுப்பினர் சார்பில் பிரியாணி

பக்ரீத் பண்டிகையொட்டி 86-வார்டில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், குடிநீர், மின் ஊழியர்கள் மற்றும் நகர்ப்புற சுகாதார மையத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மாமன்ற உறுப்பினர் அகமது கபீர் மற்றும் இஸ்லாமிய மக்கள் சார்பாக சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது.


கோவை: ஆண்டுதோறும் பக்ரீத் பண்டிகையொட்டி கோவை மாநகராட்சி 86-வது வார்டில் உள்ள உக்கடம் புல்லுக்காடு பகுதியில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மனிதநேய மக்கள் கட்சி மாமன்ற உறுப்பினர் அகமது கபீர் சார்பில் பிரியாணி மற்றும் புத்தாடைகள் வழங்கப்பட்டு வந்த நிலையில் இந்த ஆண்டும் பிரியாணி, புத்தாடை இன்று ஜூன்.18 வழங்கப்பட்டது.



இந்நிலையில் நேற்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில் பக்ரீத் பண்டிகையொட்டி 86-வார்டில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், குடிநீர், மின் ஊழியர்கள் மற்றும் நகர்ப்புற சுகாதார மையத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கோவை புல்லுக்காட்டில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார மைய வளாகத்தில் 86-வார்டு மாமன்ற உறுப்பினர் மற்றும் இஸ்லாமிய மக்கள் சார்பாக 200-க்கும் மேற்பட்ட வார்டில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சிக்கன் பிரியாணி இன்று ஜூன்.18 வழங்கப்பட்டது.

அதனை தொடர்ந்து ஆண்களுக்கு வேஷ்டி, சட்டை பெண்களுக்கு சேலை மற்றும் குழந்தைகளுக்கு குழந்தைகள் உடுத்தும் புத்தாடை என 200-க்கும் மேற்பட்டோருக்கு பக்ரீத் பண்டிகையொட்டி இலவசமாக வழங்கப்பட்டது.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் தொடர் மழையால் அமராவதி அணையின் நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 29.99...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு தென்மேற்கு பருவமழையால் அதிக நீர்வரத்து ஏற்பட்டுள...

கிணத்துக்கடவில் ஜூலை 23-24ல் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: கோவை மாவட்ட ஆட்சியர் நேரில் மனுக்கள் பெறுகிறார்

கிணத்துக்கடவு வட்டத்தில் ஜூலை 23-24 தேதிகளில் மாவட்ட ஆட்சியர் பவன் குமார்  தலைமையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்...

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...

ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக...

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தானியங்கி வாகனத் தடுப்பு அமைப்பை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி பூம் பேரியர் அமைப்பு,...