புல்லுக்காடு பகுதியில் தூய்மைப் பணியாளர்களுக்கு மனிதநேய மக்கள் கட்சி மாமன்ற உறுப்பினர் சார்பில் பிரியாணி

பக்ரீத் பண்டிகையொட்டி 86-வார்டில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், குடிநீர், மின் ஊழியர்கள் மற்றும் நகர்ப்புற சுகாதார மையத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மாமன்ற உறுப்பினர் அகமது கபீர் மற்றும் இஸ்லாமிய மக்கள் சார்பாக சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது.


கோவை: ஆண்டுதோறும் பக்ரீத் பண்டிகையொட்டி கோவை மாநகராட்சி 86-வது வார்டில் உள்ள உக்கடம் புல்லுக்காடு பகுதியில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மனிதநேய மக்கள் கட்சி மாமன்ற உறுப்பினர் அகமது கபீர் சார்பில் பிரியாணி மற்றும் புத்தாடைகள் வழங்கப்பட்டு வந்த நிலையில் இந்த ஆண்டும் பிரியாணி, புத்தாடை இன்று ஜூன்.18 வழங்கப்பட்டது.



இந்நிலையில் நேற்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில் பக்ரீத் பண்டிகையொட்டி 86-வார்டில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், குடிநீர், மின் ஊழியர்கள் மற்றும் நகர்ப்புற சுகாதார மையத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கோவை புல்லுக்காட்டில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார மைய வளாகத்தில் 86-வார்டு மாமன்ற உறுப்பினர் மற்றும் இஸ்லாமிய மக்கள் சார்பாக 200-க்கும் மேற்பட்ட வார்டில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சிக்கன் பிரியாணி இன்று ஜூன்.18 வழங்கப்பட்டது.

அதனை தொடர்ந்து ஆண்களுக்கு வேஷ்டி, சட்டை பெண்களுக்கு சேலை மற்றும் குழந்தைகளுக்கு குழந்தைகள் உடுத்தும் புத்தாடை என 200-க்கும் மேற்பட்டோருக்கு பக்ரீத் பண்டிகையொட்டி இலவசமாக வழங்கப்பட்டது.

Newsletter

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) மின்தடை

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...