ஈஷா நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் முற்போக்கு இயக்கத்தினர் புகார்

தாக்குதல் நடத்திய ஈஷா நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி முற்போக்கு அமைப்பினர் இன்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணனிடம் புகார் மனு அளித்தனர்.


கோவை: கோவை மாவட்டம் முட்டத்துவயல் பகுதியில் பழங்குடி மக்களுக்கு சொந்தமான நிலத்தில் ஈஷா அறக்கட்டளை சார்பில் மின் தகன மேடை ஒன்று அமைக்கப்பட்டது. ஆனால் முறையாக மக்களிடம் கருத்து கேட்காமலும், விதிமுறைகளை மீறி மின் தகன மேடை அமைக்கப்பட்டுள்ளதாக அப்பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

மேலும் அங்கு விதிமீறல் உள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள சென்னை உயர்நீதிமன்றம் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் மின் தகன மேடை அமைப்பதில் முறைகேடு உள்ளதா என்பது குறித்து கண்டறிய தபெதிக, தமிழ்புலிகள் அமைப்பு உள்ளிட்ட முற்போக்கு அமைப்பினர் உண்மை கண்டறியும் குழு ஒன்றை அமைத்து கடந்த வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொள்ள சென்றனர்.

அப்போது அவர்களை ஈஷா அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் முற்போக்கு அமைப்பினர்கள் சென்ற வேன் கண்ணாடியை உடைத்ததோடு, தாக்குதல் நடத்தினர். இது குறித்து முற்போக்கு அமைப்பினர் ஆலாந்துறை போலீசில் புகார் அளித்துள்ளனர்.

இந்நிலையில் முற்போக்கு அமைப்புகள் மீது தாக்குதல் நடத்திய ஈஷா நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி முற்போக்கு அமைப்பினர் இன்று ஜூன்.18 கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணனிடம் புகார் மனு அளித்தனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...