அமராவதி வனப்பகுதியில் காயம் அடைந்த ஆண் புலிக்கு சிகிச்சை அளித்து வனப்பகுதியில் விடுவிப்பு

மஞ்சம்பட்டி வன பகுதியில் காயத்துடன் நடக்கமுடியாமல் இருந்த ஆண் புலியை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்து வயிற்று பகுதியில் சிக்கியிருந்த கயிற்றை அகற்றி மீண்டும் வனப்பகுதியில் விடுவித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள அமராவதி வனச்சரகத்தில் யானை, புலி, சிறுத்தை, கரடி, உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றன.

இந்நிலையில் அமராவதி வனச்சரகத்திற்கு உட்பட்ட மஞ்சம்பட்டி வன பகுதியில் வேட்டை தடுப்பு காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது புலி ஒன்று உடலில் காயங்களுடன் நடக்க முடியாமல் இருந்ததை கண்டு வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ராமசுப்பிரமணியம், மருத்துவ குழுவினருடன் சென்று புலியை கண்காணித்து வந்துள்ளனர். அப்போது கடந்த சில தினங்களுக்கு முன்பு புலியின் வயிற்றுப் பகுதியில் கயிறு ஒன்று மாட்டி இருந்ததாகவும், அதனால் புலியின் வயிற்றுப் பகுதியில் பெரிய அளவில் காயம் ஏற்பட்டுள்ளதால் புலி நடக்க முடியாமல் தவித்து வந்ததையும் வனத்துறையினர் உறுதி செய்தனர்.

பின்பு புலிக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்த வனத்துறையினர், ஆனைமலை புலிகள் காப்பக வன கால்நடை மருத்துவர் விஜயராகவன் தலைமையில் புலிக்கு மயக்க ஊசி செலுத்தி கூண்டில் அடைத்து சிகிச்சை அளித்து உடலில் சிக்கியிருந்த கயிற்றை அகற்றினர்.



பின்பு கூண்டில் வைத்து புலியின் உடல் நிலையை வனத்துறை கண்காணித்து வந்த நிலையில் புலி ஆரோக்கியத்துடன் இருப்பதால் மயக்கம் தெளிந்த உடன் புலியை மீண்டும் கூண்டிலிருந்து வெளியேற்றி வனப்பகுதிக்குள் விடப்பட்டு அப்பகுதியில் வனத்துறை வேட்டை தடுப்பு காவலர்கள் தொடர்ந்து புலியின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

மேலும் கயிறு அறுக்கப்பட்டு காயம் ஏற்பட்ட இருந்த நிலையில் காயத்தின் தீவிரம், அதனால் ஏதேனும் தொற்று ஏற்பட்டுள்ளதா என ஆய்வு செய்வதற்காக புலியின் உடலில் இருந்து ரத்த மாதிரிகள் சேகரித்து ஆய்வகத்துக்கு அனுப்பி ஆய்வு செய்து வருவதாக கோவை மண்டல தலைமை வன பாதுகாவலரும், ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கள இயக்குனருமான ராமசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...