கோவையில் 18 மாத கைக்குழந்தையுடன் மருத்துவர் பட்டம் பெற்ற மாணவிக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பாராட்டு

கோவையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், 18 மாத கை குழந்தையுடன், கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த ஷிபினா என்பவர் பட்டம் பெற்றார். அவருக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பாராட்டு தெரிவித்தார்.


கோவை: கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்தவர் ஷிபினா. இவருக்கு கோவை இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்து, 2018-19 ஆம் ஆண்டு மருத்துவ படிப்பில் சேர்ந்தார். கல்வி முடியும் முன்பே, 2021 ஆம் ஆண்டு மருத்துவரான அப்து ராஃப் என்பவருடன் திருமணம் இவருக்கு திருமணம் நடைபெற்றது.



திருமணத்திற்கு பிறகும் மருத்துவப் படிப்பை தொடர்ந்த ஷிபினாவுக்கு திருமணம் முடிந்த ஒருவருடத்திற்கு பிறகு பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையை கவனித்துக்கொண்டே, படிப்பை தொடர்ந்த ஷிபினா இன்று டாக்டர் ஷிபினா எம்.பி.பி.எஸ்ஸாக பட்டம் பெற்றார்.



கோவையில் நடந்த பட்டமளிப்பு விழாவில், தனது 18 மாத ஹலீமா என்ற பெண் கை குழந்தையுடன், வந்து பட்டம் பெற்றார். அவருக்கு தமிழ்நாடு மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பாராட்டு தெரிவித்தார். பட்டம் பெற்ற ஷிபினாவுக்கு குடும்பத்தினர் மட்டுமின்றி அனைவரும் பாராட்டு தெரிவித்தனர்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...