காந்திபுரத்தில் கட்டப்பட்டு வரும் ஆம்னி பேருந்து நிலையத்தில் கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

காந்திபுரத்தில் ஆம்னி பேருந்து நிலைய கட்டுமானப் பணி, கே.ஜி.திரையரங்கம் முன்பக்க சாலையில் அமைந்துள்ள மாநகராட்சி காலியிடத்தில் புதிய திட்டப்பணிகள் மேற்கொள்வது தொடர்பான பணி குறித்து மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இன்று ஜூன்.11 நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட காந்திபுரம் பகுதியில் ரூ.2.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஆம்னி பேருந்து நிலையத்தினை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இன்று ஜூன்.11 நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



இதேபோல், கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.83க்குட்பட்ட கே.ஜி.திரையரங்கம் முன்பக்க சாலையில் அமைந்துள்ள மாநகராட்சி காலியிடத்தில் புதிய திட்டப்பணிகள் மேற்கொள்வது தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இன்று (ஜூன்.11) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், கடந்த 13.03.2024 அன்று கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஹாக்கி விளையாட்டு தரை அமைக்கப்படும் என அறிவித்ததைத் தொடர்ந்து, மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் ஹாக்கி விளையாட்டு தரை அமையவுள்ள இடத்தினை இன்று (ஜூன்.11) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட புரூக்பாண்ட் சாலை தேவாங்கபேட்டை பகுதியில் மாநகராட்சி சார்பில் அமைந்துள்ள இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனம் நிறுத்துமிடத்தில் புதிய வணிக வளாகம் அமைப்பது தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இன்று ஜூன்.11 நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட ராஜவீதியில் மாநகராட்சி சார்பில் அமைந்துள்ள இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனம் நிறுத்துமிடத்தில் புதிய வணிக வளாகம் அமைப்பது தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இன்று (ஜூன்.11) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

உடன் மாநகர தலைமைப் பொறியாளர் அன்பழகன், மத்திய மண்டல தலைவர் மீனாலோகு, உதவி ஆணையர் செந்தில்குமரன், செயற்பொறியாளர் கருப்பசாமி, மாமன்ற உறுப்பினர் பிரபா ரவீந்திரன், நகரமைப்பு அலுவலர் குமார், உதவி நகர திட்டமிடுநர் கோவிந்த பிரபாகரன், மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன், உதவி பொறியாளர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...