அா்த்தநாரிபாளையத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

அா்த்தநாரிபாளையத்தில் கடந்த 2021 ஆகஸ்ட் 20-ஆம் தேதி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்த நீதிபதி, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இரண்டு லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.


கோவை: பொள்ளாச்சி அருகே அா்த்தநாரிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் பெருமாள் (64), விவசாயி. இவா், அந்தப் பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த 9 வயது சிறுமிக்கு கடந்த 2021 ஆகஸ்ட் 20-ஆம் தேதி பாலியல் தொல்லை கொடுத்ததாக, சிறுமியின் தாயார் அளித்த புகாரின்பேரில் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசார் இவரைக் கைது செய்தனா்.

இந்த வழக்கின் விசாரணை கோவை போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் வழக்கின் விசாரணை முடிவடைந்து நேற்று ஜூன்.10 தீா்ப்பளிக்கப்பட்டது.

நீதிபதி ஜி.குலசேகரன் அளித்த தீா்ப்பில், பெருமாளுக்கு ஒரு பிரிவில் 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை, ரூ.5,000 அபராதமும், மற்றொரு பிரிவில் 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை, ரூ.2,000 அபராதமும், மூன்றாவது பிரிவில் 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்ததோடு, அவற்றை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டார். அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.2 லட்சம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...