திருப்பூரில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு - 45,885 பேர் பங்கேற்பு

திருப்பூரில் நடைபெறும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி 4 தேர்வில் 45,885 பேர் பங்கேற்பு. 155 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது, கண்காணிப்பு மற்றும் அதிகாரிகள் மொபைல் டீம், பறக்கும் படையினர் ஈடுபட்டுள்ளனர்.



திருப்பூர்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி 4 தேர்வில், திருப்பூர் மாவட்டத்தில் 45 ஆயிரத்து 885 பேர் எழுதுகிறார்கள்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தொகுதி 4 மூலம், தமிழகத்தில் காலியாக உள்ள 6,244 காலிபணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, இன்று தமிழகம் முழுவதும் தேர்வு நடக்கிறது.



அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டத்தில் தொகுதி 4 தேர்வை, 45 ஆயிரத்து 885 பேர் எழுதுகிறார்கள். இதற்காக மாவட்டம் முழுவதும் 155 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்வை சிறப்பாக நடத்தி முடிக்கும் வகையில் 45 மொபைல் டீம் மற்றும் 18 பறக்கும் படையினர், 155 கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.



காலை 9 மணிக்கு மேல் வருபவர்களுக்கு தேர்வு மையத்திற்குள் அனுமதி கிடையாது என்பதால், தேர்வாளர்கள் 8 மணி முதலே தேர்வு மையத்திற்கு வர தொடங்கினர். அனுமதிப்பதற்கு முன்பாக தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக மொபைல் போன்கள், ஸ்மார்ட் வாட்ச், பர்ஸ் ஆகியவை கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை. ஹால் டிக்கெட் உடன் ஏதாவது ஒரு அடையாள அட்டையை காண்பித்த பின்னரே தேர்வு மையத்திற்கு பட்டனர். ஒன்பது 30 மணிக்கு வினாத்தாள்கள் வழங்கப்பட்டது. ஐந்து நிமிட இடைவெளிக்கு பிறகு தேர்வாளர்கள் தேர்வு எழுத துவங்கினர்.



தேர்வுமைய கட்டுப்பாட்டு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் அனைத்து தேர்வு மையங்களும் வீடியோ கேமரா மூலம் ஒளிப்பதிவு செய்யப்பட்டு வருகிறது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...