உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு கோவை ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லுரி மற்றும் மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு

உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு கோவை ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லுரி மற்றும் மருத்துவமனை சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு நிழ்ச்சியில் புகையிலைனால் ஏற்படும் தீமைகள் மற்றும் உடல் உபாதைகள் பற்றி பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.


கோவை: புகையிலை பழக்கத்தினால் ஏற்படும் தீய விளைவுகளை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த, ஒவ்வொரு வருடமும் உலக புகையிலை எதிர்ப்பு தினம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லுரி மற்றும் மருத்துவமனை சார்பாக நடைபெற்ற நிகழ்வில் கோவை பந்தய சாலை பகுதியில் எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின்இணை நிர்வாக அறங்காவலர் சுந்தர் தலைமை தாங்கி கொடியசைத்து விழாவினை தொடங்கி வைத்தார்.



கல்லூரியின் பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அலுவலர்கள் இந்நிகழ்ச்சியில் பங்குபெற்று சைக்கிளிங் மற்றும் நடைபயணம் சென்று பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக விழிப்புணர்வு பிரச்சார சீட்டுகள் வழங்கி புகையிலைனால் ஏற்படும் தீமைகள் மற்றும் உடல் உபாதைகளை பற்றிய விளக்கங்களை வழங்கினர்.



இதனை தொடர்ந்து புகையிலை பழக்கத்தை எதிர்த்து உறுதிமொழி மற்றும் கையெழுத்து பொதுமக்களிடம் இருந்து பெறப்பெற்றது. ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவகல்லூரியின் முதல்வர் தீபானந்தன், கோவை பந்தய சாலை காவல் நிலையத்தின் ஆய்வாளர் அர்ஜுன் மற்றும் எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி ராம்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று இவ்விழாவினை தொடங்கி வைத்து சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சியில் பொது மக்களுக்கு புகையிலை உபயோகிப்பதால் ஏற்படும் உடல் நல பாதிப்புகள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தப்பட்டது.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...