துடியலூர் அருகே ஆட்டுக்குட்டியை மீட்கச் சென்று கிணற்றில் தவறி விழுந்த நபர் பத்திரமாக மீட்பு

தொப்பம்பட்டி பிரிவு ஜோஸ் நகர் பகுதியில் 100 அடி ஆழக்கிணற்றில் விழுந்த ஆட்டுக்குட்டியை மீட்க சென்ற கார்த்தி என்பவரும் கிணற்றில் தவறி விழுந்தார். கார்த்தியை பத்திரமாக மீட்டு தீயணைப்புத்துறையினர் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆட்டுக்குட்டியையும் பத்திரமாக மீட்டு உரிமையாளரிடம் அவர்கள் ஒப்படைத்தனர்.


கோவை: கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி பிரிவு ஜோஸ் நகர் பகுதியில் வீட்டுக் கிணற்றில் விழுந்த ஆட்டுக்குட்டியை மீட்கச் சென்ற கார்த்தி என்பவர் 100 ஆழ கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடியவரை பெரியநாயக்கன்பாளையம் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

கோவை துடியலூர் அருகே உள்ள தொப்பம்பட்டி பிரிவு ஜோஸ் நகரைச் சேர்ந்தவர் கார்த்தி. அவருக்கு வயது 42,நேற்று மாலை அவர் வளர்த்து வந்த ஆட்டுக்குட்டி ஒன்று 100 அடி ஆழமுள்ள வீட்டு கிணற்றில் தவறி விழுந்துள்ளது. அதனை மீட்பதற்காக கார்த்தி கிணற்றுக்குள் இறங்கியபோது அவரும் கிணற்றில் விழுந்துள்ளார்.



இந்த தகவல் அறிந்துவந்த பெரியநாயக்கன்பாளையம் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர், நிலைய அலுவலர் கார்த்திகேசன், சுரேஷ்குமார்,சதீஷ் கண்ணன் வேல்முருகன் மோகன்ராஜ் உள்ளிட்ட துறை வீரர்கள் துரிதமாக செயல்பட்டு கார்த்திக்கை உயிருடன் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஆட்டுக்குட்டியையும் உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Newsletter

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...