தாராபுரம் அருகே தேங்காய் மஞ்சி குடோனில் தீ விபத்து – ரூ.80 லட்சம் மதிப்பிலான தேங்காய் நார் மஞ்சு சேதம்

தொட்டிபாளையம் கிராமத்தில் ரவி என்பவருக்கு சொந்தமான தேங்காய் மஞ்சி குடோனில் திடீர் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீயை நான்கு மணி நேரம் போராடி தீயணைப்புத்துறையினர் கட்டுப்படுத்தினர். தீ விபத்தில் ரூ.80 லட்சம் மதிப்பிலான தேங்காய் நார் மஞ்சு சேதமானது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த பொட்டிக்காம்பாளையம் அருகே உள்ளதொட்டிபாளையம் கிராமத்தில் ரவி என்பவருக்கு சொந்தமான ஸ்ரீ சரவணா கையர்ஸ் என்ற பெயரில் தேங்காய் நார் தொழிற்சாலை செயல்பட்டுவருகிறது.

தேங்காய் மட்டையிலிருந்து மஞ்சை பிரித்தெடுத்து அதிலிருந்து பதப்படுத்தப்பட்ட தேங்காய் நாரை பிரித்தெடுத்து இயந்திரங்கள் மூலம் பண்டல்கள் ஆக இந்த கிடங்கில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. கேரளா மற்றும் நாகர்கோவில், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு இங்கிருந்து தேங்காய் நார்கள் விற்பனைக்காக கொண்டு செல்வது வழக்கம்.



கடந்த ஒரு மாதமாக ரூ.80 லட்சம் மதிப்புள்ள தேங்காய் நார்கள் ஏற்றுமதிக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் இன்று மதியம் 1மணி அளவில்தேங்காய் மஞ்சி அடுக்கி வைத்திருந்த பகுதியில் ஏற்பட்ட திடீர் மின்கசிவால் தேங்காய் மஞ்சியில்தீ பற்றியது.

மளமளவென்று கிடங்கு முழுவதும் பரவியதால், தீயை கட்டுப்படுத்த முடியாத தொழிலாளர்கள் தாராபுரம் மற்றும் உடுமலை தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர் சுமார் 4மணி நேரம்போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.தேங்காய் மஞ்சி பண்டல்கள் முற்றிலுமாக தீயில் கருகி சேதமானது.தீ விபத்து குறித்து குண்டடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...