கோவை எம்ஜிஆர் மார்கெட்டிற்கு தக்காளி வரத்து குறைவு – ஒரு கிலோ தக்காளி ரூ.55 விற்பனை

கடந்த சில நாட்களாக பெய்த மழையால் தக்காளி மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த வாரம் 25 கிலோ கொண்ட தக்காளிப்பெட்டி ரூ.450-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று (மே.27) ரூ.1,250-க்கு விற்பனை செய்யப்பட்டது.


கோவை: கோவை மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரத்திற்கு மேலாக கோடை மழை பெய்து வந்தது. தற்போது மழை ஓய்ந்த நிலையில் தக்காளி மகசூல் பாதிக்கப்பட்டுள்ளதால் மார்க்கெட்டுகளுக்கு வரும் தக்காளி வரத்து வெகுவாக குறைந்துள்ளது.

அதன்படி கோவை மாவட்டத்தை பொருத்தவரை தொண்டாமுத்தூர், நரசிபுரம், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு உள்ளிட்ட இடங்களில் அதிகளவு தக்காளி விளைவிக்கப்படுகிறது.

கோவை எம்ஜிஆர் மார்க்கெட்டுக்கு தினமும் 200 டன் முதல் 250 டன் வரை தக்காளி வந்து கொண்டு இருந்த நிலையில், தற்போது 120 டன் அளவிற்கு தக்காளி வருகிறது.

இதன் காரணமாக கடந்த வாரம் 25 கிலோ கொண்ட தக்காளிப்பெட்டி ரூ.450-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று (மே.27) ரூபாய் 1,250-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் கோவையில் தக்காளி விலை கிடுகிடு என உயர்ந்து கிலோ ரூ.55-க்கு விற்பனையாகிறது.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...