கோவையில் பசுமை தமிழ்நாடு இயக்கம் சார்பில் மரக்கன்றுகள் நடும் பணி - மாநகராட்சி ஆணையாளர் தொடக்கம்

பசுமை தமிழ்நாடு இயக்கம் சார்பில் மாநகராட்சி பூங்காக்கள், திறவிடங்கள், குளக்கரை நீர்வழித்தடங்களின் கரைகளில் என சுமார் 264 இடங்களில் வேம்பு, பூவரசன், புங்கன் மற்றும் நாவல் உள்ளிட்ட மரங்கள் நடவு செய்யப்பட உள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுருபிரபாகரன் தெரிவித்துள்ளார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி, தெற்கு மண்டலத்திற்குட்பட்ட குறிச்சி ஹவுசிங்யூனிட் அருகில் பசுமை தமிழ்நாடு இயக்கம் (Green Tamilnadu Mission) சார்பில் மாபெரும் மரக்கன்றுகள் நடும் பணியினை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுருபிரபாகரன் இன்று (27.05.2024) துவக்கி வைத்தார்.



அதனைத்தொடர்ந்து அவர் பேசியாதவது, கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுற்றுச்சூழலையும், இயற்கை வளங்களையும் பாதுகாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி, பசுமை தமிழ்நாடு இயக்கம் (Green Tamilnadu Mission) திட்டத்தின் கீழ் மரம் நடும் விழா தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் முதற்கட்டமாக, கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் மத்தியம் என ஐந்து மண்டல பகுதிகளில் உள்ள மாநகராட்சி பூங்காக்கள், திறவிடங்கள், குளக்கரை நீர்வழித்தடங்களின் கரைகளில் என சுமார் 264 இடங்களில் வேம்பு, பூவரசன், புங்கன் மற்றும் நாவல் உள்ளிட்ட 10123 வகைகளான மரங்கள் நடவு செய்யப்பட்டு, பராமரிக்கப்படவுள்ளது என்றார்.

இந்நிகழ்வின்போது, உதவி ஆணையர் (பொ) இளங்கோவன், உதவி செயற்பொறியாளர் கனகராஜ், மண்டல சுகாதார அலுவலர் ஆண்டியப்பன், உதவி பொறியாளர் சபரிராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

Newsletter

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...

அமராவதி அணை நீர்மட்டம் 48.07 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 29.59 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 11ஆம் தேதி நிலவரப்படி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நிலவரம்

கோவை மாவட்டத்தில் ஜூலை 11 நிலவரப்படி ஆழியாறு அணையில் 55.4 அடி, பரம்பிக்குளம் அணையில் 18.24 அடி, சோலையாறு அணையில் 91.21 அ...

கோவையில் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவுக்கு இறுதி வாய்ப்பு; ஜூலை 31-க்குள் நிறைவு செய்ய அறிவுறுத்தல்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 3.97 லட்சம் பயனாளிகள் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவு செய்யாமல் நிலுவையில் உள்ளனர். ஜூலை 31, 20...