வறட்சி நிவாரணம் வழங்கக்கோரி மைவாடி பட்டு வளர்ச்சி துறை அலுவலகத்தில் பட்டு விவசாயிகள் மனு

கடந்த நான்கு மாதங்களாக நிலவி வரும் தட்பவெப்ப நிலை காரணமாக 30 சதவீதம் பட்டுக்கூடு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பட்டு விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணமாக ஒரு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வழங்க வேண்டும் என்று பட்டு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: உடுமலை அருகே பட்டு வளர்ச்சி துறை அலுவலகத்தில் திரண்ட விவசாயிகள் பட்டு விவசாயத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, வறட்சி நிவாரணம் வழங்க கோரிக்கை.



திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மைவாடி பட்டு வளர்ச்சி துறை அலுவலகத்தில், தமிழ்நாடு பட்டுக்கூடு உற்பத்தி விவசாயிகள் நல சங்கம் சார்பில், நூற்றுக்கும் மேற்பட்ட பட்டுக்கூடு உற்பத்தி செய்து வரும் விவசாயிகள் ஒன்று திரண்டனர். பட்டு வளர்ச்சி துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில்,உதவி இயக்குனர் மனிஷாவிடம் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினர்.



அதில், தமிழகம் முழுவதும் 25,000 மேற்பட்ட விவசாயிகள் பட்டு விவசாயம் செய்து பட்டுக்கூடு உற்பத்தி செய்து வருவதாகவும், இத்தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல லட்சம் பேர் வேலை செய்து பயன் அடைந்து வருவதாகவும், இந்த தொழிலுக்கு அடிப்படையான வீரியம் இல்லாத பட்டுப்புழுக்களால் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

கடந்த நான்கு மாதங்களாக நிலவி வரும் தட்பவெப்ப நிலை காரணமாக 30 சதவீதம் பட்டுக்கூடு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சில பகுதிகளில் முழுமையாக தோல்வி அடைந்ததாகவும். இதற்கான காப்பீடு முன்னுக்கு பின் முரணாக உள்ளது எனவும் புகார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பட்டு விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணமாக ஒரு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வீதம் கணக்கீடு செய்தும், உற்பத்தி பாதித்த விவசாயிகளுக்கு ஒரு மூட்டை தொகுதிக்கு ரூ.நானூறு வீதம் கொடுத்து உதவுமாறு தமிழக அரசையும், பட்டு வளர்ச்சித் துறையும் கேட்டுக் கொள்வதாகவும் வலியுறுத்தி உள்ளனர்.

Newsletter

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...