கோடை காலத்தில் தண்ணீர் பஞ்சத்தை போக்க கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் விழிப்புணர்வு

மழைக்காலங்களில் அனைத்து வீடுகளிலும் மழை நீர் சேமிப்பு தொட்டிகள் அமைத்து, மழைநீரை சேகரித்தால் கோடை காலங்களில் வரும் தண்ணீர் பிரச்சனைகளை தடுக்க முடியும் என கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் தெரிவித்தனர்.


கோவை: கோவையில் கோடை காலத்தில் தண்ணீர் பஞ்சத்தை போக்கும் விதமாக மழைக்காலங்களில் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் குறித்த காட்சிகளை கொண்டு குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர். தமிழகத்தில் காலநிலைக்கு ஏற்ப வெப்பம், குளிர்ச்சி, மழை என்பது மாறி மாறி வருகிறது.



ஆனால் கடந்த ஆண்டுகளை விட எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு கோடை காலத்தில் கடும் வறட்சி மற்றும் வெப்பம் அதிகரித்தது. இதனால் பல்வேறு இடங்களில் குடிநீர் பஞ்சமும் நிலவியது. இதனிடையே நம்ம ஊருக்கு தேவையான தண்ணீரை நாமே உற்பத்தி செய்யும் வகையில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் பல்வேறு இடங்களில் குளம், குட்டைகளை தூர்வாரி வருகின்றனர்.



இதனிடைய கடந்த வாரம் கோவை வெள்ளலூர் பகுதியில் உள்ள சுமார் 2.5 ஏக்கர் பரப்பளவில் உள்ள குட்டையை ப்ரூக்ஃபீல்ட்ஸ் பங்களிப்புடன் தூர்வாரியதில் இரண்டு நாட்கள் பெய்த மழையில் வறண்டு கிடந்த குளம் நிரம்பி காட்சியளித்துள்ளது. இதே போல் மழைக்காலங்களில் அனைத்து வீடுகளிலும் மழை நீர் சேமிப்பு தொட்டிகளை அமைத்து சேகரித்தால் கோடை காலங்களில் வரும் வரச்சிகளை தடுக்க முடியும் என குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் தெரிவித்தனர். அதே போல் தூர் வாருவதற்கு முன்பும் தூர்வாரிய பின்பும் மழைநீர் தேங்கிய கண்கவர்ந்த காட்சிகளை அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வெளியிட்டுள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...