உடுமலை அனைத்து மகளிர் காவல் நிலையம் முன்பு பெண் காவல் ஆய்வாளரை கண்டித்து பத்திரிக்கையாளர்கள் போராட்டம்

பாலியல் வழக்கு தொடர்பான தகவல் கேட்க சென்ற பத்திரிக்கையாளர்களை மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் கவிதா, தகவல் தர மறுத்து காவல்நிலையத்திற்குள் வரக்கூடாது, உங்களுக்கு எந்த தகவலும் தர முடியாது வெளியே போங்க என்று கூறியதாக பத்திரிக்கையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் கடந்த 12-ம் தேதி 17 வயது சிறுமி தொடர்பான பாலியல் வழக்கில் 3 சிறுவர்கள் உட்பட 9 பேர் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கபட்டுள்ளனர். இந்த வழக்கு சம்பந்தமாக மேலும் சில இளைஞர்களுக்கு தொடர்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து தகவல் கேட்க சென்ற பத்திரிக்கையாளர்களை மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் கவிதா, தகவல் தர மறுத்து காவல்நிலையத்திற்குள் வரக்கூடாது, உங்களுக்கு எந்த தகவலும் தர முடியாது வெளியே போங்க என்று கூறியுள்ளார்.

காவல் ஆய்வாளரின் இந்த செயலை கண்டித்து உடுமலை அனைத்து பத்திரிகையாளர்களும் உடுமலை அனைத்து மகளிர் காவல் நிலையம் முன்பாக சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உடுமலை DSP சுகுமாரன், குடிமங்கலம் ஆய்வாளர் கீதா, பேச்சுவார்த்தை நடத்தினர். காவல்நிலையத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு தேவையான தகவல்களை கொடுக்கவும், மரியாதையாக நடத்தவும் உறுதியளித்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர். உடுமலை மகளிர் காவல் நிலையம் முன்பு பத்திரிக்கையாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...