ஜி.கே.என்.எம் மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தின விழா கொண்டாட்டம்

சர்வதேச செவிலியர் தின விழாவை முன்னிட்டு, செவிலியர் துறையில் 25 வருடங்களுக்கும் மேல் தொடர்ந்து சேவையாற்றிய செவிலியர்களுக்கு, ஜி.கே.என்.எம் மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர். G.மனோகரன் சாதனையாளர் விருது வழங்கினார்.


கோவை: மருத்துவ துறையின் முதுகெலும்பாக, அன்றாடும் தங்களது உழைப்பை ஈடுஇணையற்ற சேவையாக வழங்கி வரும் செவிலியர்களை பாராட்டி கௌரவிக்கும் வண்ணம் ஆண்டுதோறும் மே 12 ஆம் தேதி சர்வதேச செவிலியர் தினம் அனுசரிக்கப்படுகின்றது. இந்த வருடம், ஜி.கே.என்.எம் மருத்துவமனையில், சர்வதேச செவிலியர் தின விழா, மே 11 ஆம் தேதியான இன்று சிறப்பாக கொண்டப்பட்டது.

நிகழ்ச்சியின் தொடக்கமாக, செவிலியர் துறையில் 25 வருடங்களுக்கும் மேல் தொடர்ந்து பணியாற்றி சேவையாற்றிய செவிலியர்களுக்கு, சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. ஜி.கே.என்.எம் மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர். G.மனோகரன் சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கினார்.

இந்த ஆண்டின் செவிலியர் தின, ஆய்வுப்பொருளான, 'எங்கள் "செவிலியர்கள் எங்கள் எதிர்காலம், கவனிப்பின் பொருளாதார சக்தி" என்பது பற்றி பேசிய டாக்டர் G.மனோகரன், மருத்துவத்துறையின் எதிர்காலம் செவிலியர்களை சிறப்பாக பயன்படுத்துவதில் தான் உள்ளது என்று குறிப்பிட்டார்.



இந்த ஆண்டின் விழாவையொட்டி, முன்னதாகவே, செவிலியர்கள் தங்களது பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பல்வேறு போட்டிகளின் வெற்றியாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. மருத்துவமனையின் மருத்துவர்கள், நிர்வாகிகள் என அனைவரும் செவிலியர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து ஊக்குவித்தனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...