கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் போலீசாருக்கு முதலுதவி செய்வது குறித்து பயிற்சி வகுப்பு

மாரடைப்பு, சாலை விபத்து போன்ற நிகழ்வுகளின் போது உடனடியாக பொது மக்களுக்கு முதலுதவி செய்து உயிரை காப்பாற்றுவதோடு அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பது வரை அனைத்து பயிற்சிகளும் காவலர்களுக்கு வழங்கப்பட்டது.


கோவை: கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் மாநகர ஆயுதப்படை காவலர்களுக்கான முதலுதவி சிகிச்சை பயிற்சி முகாம் வாரம் ஒரு முறை என நான்கு வாரங்கள் நடைபெற உள்ளது.



அதன்படி கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் இன்று (மே.9) நடைபெற்ற முதலுதவி பயிற்சி முகாமில் ஆண், பெண் என சுமார் 180 க்கும் மேற்பட்ட காவலர்கள் கலந்து கொண்டனர்.



அந்த காவலர்களுக்கு தனியார் தன்னார்வ அமைப்பு சார்பில் பயிற்சிகள் வழங்கப்பட்டது. குறிப்பாக மாரடைப்பு, சாலை விபத்து போன்ற நிகழ்வுகளின் போது உடனடியாக பொது மக்களுக்கு முதலுதவி செய்து உயிரை காப்பாற்றுவதோடு அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பது வரை அனைத்து பயிற்சிகளும் வழங்கப்பட்டது.



அண்மையில் மாநகர ஆயுதப்படையில் புதிதாக காவலர்கள் இணைந்துள்ளதால், அவர்கள் பயன் பெறும் வகையிலும், அவசர காலத்தில் எவ்வாறு விரைந்து முதலுதவி செய்ய வேண்டும் என்பது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...

அமராவதி அணை நீர்மட்டம் 48.07 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 29.59 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 11ஆம் தேதி நிலவரப்படி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நிலவரம்

கோவை மாவட்டத்தில் ஜூலை 11 நிலவரப்படி ஆழியாறு அணையில் 55.4 அடி, பரம்பிக்குளம் அணையில் 18.24 அடி, சோலையாறு அணையில் 91.21 அ...