இணைய சேவை குறைபாட்டால் தாராபுரம் தலைமை தபால் நிலைய சேவை பாதிப்பு

இணைய சேவை குறைபாடு காரணமாக நேற்றிலிருந்து தலைமை தபால் நிலையத்திலிருந்து எந்த ஒரு பதிவு தபால்களும், இதர சேவைகளும் நடைபெறாமல் உள்ளது. இணைய சேவையில் குறைபாடு உள்ளதாக தலைமை தபால் நிலையத்தில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: தாராபுரம் தலைமை தபால் நிலையத்திலிருந்து தினசரி ஏராளமான பதிவு தபால்கள் வெளியூர்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இணைய சேவை குறைபாடு காரணமாக நேற்றிலிருந்து தலைமை தபால் நிலையத்திலிருந்து எந்த ஒரு பதிவு தபால்களும், இதர சேவைகளும் நடைபெறாமல் உள்ளது.

இதற்கு இணைய சேவையில் குறைபாடு உள்ளதாக தலைமை தபால் நிலையத்தில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் அடிக்கடி இணைய சேவை குறைபாடுகள் ஏற்பட்டு வருகிறது. பெரும்பாலும் அரசு நிறுவனங்களில் உயிரோடு பாரத் சென்சார் நிகாம் லிமிடெட் கட்டுப்பாட்டில் இணைய சேவைகள் தாராபுரம் பிஎஸ்என்எல் அலுவலகம் மூலமாக வழங்கப்பட்டுள்ளது.

இணையத்தில் அடிக்கடி குறைபாடுகள் ஏற்படுவதால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்பிற்குள்ளாகி வருகிறார்கள். இதனால் டிஜிட்டல் இந்தியா சேவை முழுமையாக முடங்கி விட்டது. அரசு நிறுவனம் மோசமான இணைய சேவையை சந்திப்பதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். விரைவில் பிஎஸ்என்எல் நிர்வாகம் இணைய சேவையை சீர் செய்யுமா என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...