இணைய சேவை குறைபாட்டால் தாராபுரம் தலைமை தபால் நிலைய சேவை பாதிப்பு

இணைய சேவை குறைபாடு காரணமாக நேற்றிலிருந்து தலைமை தபால் நிலையத்திலிருந்து எந்த ஒரு பதிவு தபால்களும், இதர சேவைகளும் நடைபெறாமல் உள்ளது. இணைய சேவையில் குறைபாடு உள்ளதாக தலைமை தபால் நிலையத்தில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: தாராபுரம் தலைமை தபால் நிலையத்திலிருந்து தினசரி ஏராளமான பதிவு தபால்கள் வெளியூர்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இணைய சேவை குறைபாடு காரணமாக நேற்றிலிருந்து தலைமை தபால் நிலையத்திலிருந்து எந்த ஒரு பதிவு தபால்களும், இதர சேவைகளும் நடைபெறாமல் உள்ளது.

இதற்கு இணைய சேவையில் குறைபாடு உள்ளதாக தலைமை தபால் நிலையத்தில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் அடிக்கடி இணைய சேவை குறைபாடுகள் ஏற்பட்டு வருகிறது. பெரும்பாலும் அரசு நிறுவனங்களில் உயிரோடு பாரத் சென்சார் நிகாம் லிமிடெட் கட்டுப்பாட்டில் இணைய சேவைகள் தாராபுரம் பிஎஸ்என்எல் அலுவலகம் மூலமாக வழங்கப்பட்டுள்ளது.

இணையத்தில் அடிக்கடி குறைபாடுகள் ஏற்படுவதால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்பிற்குள்ளாகி வருகிறார்கள். இதனால் டிஜிட்டல் இந்தியா சேவை முழுமையாக முடங்கி விட்டது. அரசு நிறுவனம் மோசமான இணைய சேவையை சந்திப்பதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். விரைவில் பிஎஸ்என்எல் நிர்வாகம் இணைய சேவையை சீர் செய்யுமா என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...