பொள்ளாச்சியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி வாகனங்களில் சார் ஆட்சியர் மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் ஆய்வு

முறையான ஓட்டுநர் உரிமம் இருக்கிறதா, வேக கட்டுப்பாட்டு கருவி செயல்படுகிறதா, அவசர கால வழிகள் முறையாக அமைக்கப்பட்டுள்ளதா, பள்ளி மாணவர்கள் ஏறுவதற்கான படிகள் சரியான உயரத்தில் உள்ளதா, மருத்துவ உபகரணங்கள் இருக்கிறதா என பள்ளி வாகனங்களின் ஓட்டுநர்களிடம் அதிகாரிகள் விசாரித்தனர்.


கோவை: ஆண்டுதோறும் பள்ளிகளில் கோடை விடுமுறை நாட்களில் தனியார் பள்ளிகளில் உள்ள வாகனங்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்வது வழக்கம்.



அதன்படி இன்று பொள்ளாச்சியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் இயக்கப்படும் 372 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது.



பொள்ளாச்சி ஊஞ்சலம்பட்டி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் கேத்தரின் சரண்யா, பொள்ளாச்சி காவல்துறை துணை கண்காணிப்பாளர் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கலந்து கொண்டு பள்ளி வாகனங்களின் ஓட்டுநர்களிடம் முறையான ஓட்டுநர் உரிமம் இருக்கிறதா, வேக கட்டுப்பாட்டு கருவி செயல்படுகிறதா, அவசர கால வழிகள் முறையாக அமைக்கப்பட்டுள்ளதா, பள்ளி மாணவர்கள் ஏறுவதற்கான படிகள் சரியான உயரத்தில் உள்ளதா, மருத்துவ உபகரணங்கள் இருக்கிறதா என ஆய்வு செய்தனர்.



மேலும் திடீரென பள்ளி வாகனங்களில் தீ பிடித்தால் உடனடியாக தீயை அணைப்பது குறித்து பொள்ளாச்சி தீயணைப்பு துறை சார்பில் செயல் விளக்கவும் அளிக்கப்பட்டது.



அரசு உத்தரவுப்படி பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து விதி மூலம் வாகனங்கள் இயக்கபடுகிறதா என ஆய்வு செய்யப்பட்டது.

இதில் ஏதேனும் குறைகள் இருந்தால் அந்த வாகனங்கள் இயக்க தடை செய்யப்பட்டு அதை மீண்டும் சரி செய்து பின்னரே இயக்க அனுமதிக்கப்படும் என்று ஆய்வு செய்த பின்னர் பொள்ளாச்சி சார் ஆட்சியர் கேத்திரின் சரண்யா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...