தாராபுரம் அருகே கோவிலுக்கு சென்ற டாட்டா ஏஸ் வாகனம் கவிழ்ந்த விபத்தில் 19 பேர் படுகாயம் - மூதாட்டி ஒருவர் உயிரிழப்பு

மூலனூர் அருகே பட்டுத்துறை என்ற இடத்தில் உள்ள மலையாள கருப்பண்ணசாமி கோவில் விழாவிற்காக திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் டாட்டா ஏஸ் வாகனத்தில் சென்றபோது விபத்தில் சிக்கி 19 பேர் காயமடைந்தனர். மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மூலனூரை அடுத்த துலுக்கவலசு அருகே கட்டுப்பாட்டை இழந்த டாட்டா ஏஸ் வாகனம் நிலை தடுமாறி சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.



மூலனூர் அருகே உள்ள பட்டுத்துறை என்ற இடத்தில் மலையாள கருப்பண்ணசாமி கோவில் விசேஷத்திற்காக திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் டாட்டா ஏஸ் வாகனத்தில் கோவிலுக்கு வந்து கொண்டிருந்த வழியில் எதிர்பாராதமாக விபத்து ஏற்பட்டது.



இந்த விபத்தில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம் (56), ராமநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த சத்யா (14), அதே பகுதியைச் சேர்ந்த மணிமேகலை (35,) நாகரத்தினம் மார்க்கம்பட்டி, மாரியம்மாள் (36), செல்வபிரியா (13), ஈஸ்வரி வயது 39, மற்றொரு ஈஸ்வரி வயது 30, பொட்டியம்மாள் (55) இறந்தவர், லட்சுமி வயது 47, சுப்பிரமணி 60, பழனியம்மாள் (70) ஆகியோர் காயம் அடைந்தனர்.



காயம் அடைந்தவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு 12-நபர்களை தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகவும், மீதமுள்ள 8- நபர்களை வெள்ளகோவில் அரசு மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து மூலனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...