மேட்டுப்பாளையம் அருகே எரிந்த நிலையில் பிணம்- காவல்துறையினர் விசாரணை

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே மாதேஸ்வரன் மலையருகே ஆட்டோ நகர் பகுதியில் ஆடு மேய்பதற்காக வந்த பெண் அங்குள்ள மரத்தின் அடியில் எரிந்த நிலையில் பிணம் ஒன்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதைத்தொடர்ந்து, காரமடை காவல் நிலையத்திற்கு இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து காரமடை போலீஸ் ஆய்வாளர் உள்ளிட்ட காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும், கோவை மாவட்ட எஸ்.பி. ரம்யபாரதி, பொறுப்பு டி.எஸ்.பி. குணசேகர் ஆகியோரும் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.

இதுகுறித்து, காவல்துறையினர் தெரிவிக்கையில், 80 சதவிகிதம் எரிந்த நிலையில் இருக்கும் இந்த சடலம் பெண்ணாக இருக்கலாம் என்றும், வேறு இடத்தில் கொலை செய்யப்பட்டு இங்கு கொண்டுவந்து எரித்திருக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்தனர்.

மேலும், எரிந்த நிலையில் பிணத்தை எடுத்து வந்த வாகனத்தின் டயர் தடயம் மற்றும் தனித் தனியே வெவ்வேறு இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட எரிந்த உடலின் கால்கள் ஆகியவற்றைக் கொண்டு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.   

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...