மேட்டுப்பாளையம் அருகே எரிந்த நிலையில் பிணம்- காவல்துறையினர் விசாரணை

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே மாதேஸ்வரன் மலையருகே ஆட்டோ நகர் பகுதியில் ஆடு மேய்பதற்காக வந்த பெண் அங்குள்ள மரத்தின் அடியில் எரிந்த நிலையில் பிணம் ஒன்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதைத்தொடர்ந்து, காரமடை காவல் நிலையத்திற்கு இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து காரமடை போலீஸ் ஆய்வாளர் உள்ளிட்ட காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும், கோவை மாவட்ட எஸ்.பி. ரம்யபாரதி, பொறுப்பு டி.எஸ்.பி. குணசேகர் ஆகியோரும் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.

இதுகுறித்து, காவல்துறையினர் தெரிவிக்கையில், 80 சதவிகிதம் எரிந்த நிலையில் இருக்கும் இந்த சடலம் பெண்ணாக இருக்கலாம் என்றும், வேறு இடத்தில் கொலை செய்யப்பட்டு இங்கு கொண்டுவந்து எரித்திருக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்தனர்.

மேலும், எரிந்த நிலையில் பிணத்தை எடுத்து வந்த வாகனத்தின் டயர் தடயம் மற்றும் தனித் தனியே வெவ்வேறு இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட எரிந்த உடலின் கால்கள் ஆகியவற்றைக் கொண்டு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.   

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...