உடுமலையில் குட்கா பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட 5 பேர் கைது

உடுமலை நகரப் பகுதியில் போதைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 5 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 14.797 கிலோ கிராம் அளவிலான போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை நகரப் பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா உள்ளிட்ட போதை வாஸ்துக்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக உடுமலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சம்பத்குமார் உள்ளிட்ட போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர்.

அப்போது உடுமலை நகரப் பகுதியில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கட்டாராம் சவுத்ரி(38), சுரேஷ்குமார்(23), தயாராம் (23), சாந்தாராம்(20), உடுமலை தாலுக்கா உரல் பட்டியைச் சேர்ந்த சுரேஷ்(32) ஆகியோர் கணேஷ், கூலிப், ஹான்ஸ், விமல் உள்ளிட்ட 14.797 கிலோ கிராம் அளவிலான போதை வாஸ்துக்கள் விற்பனை செய்வது தெரிய வந்தது.

இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்து போதை வாஸ்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Newsletter

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 30ஆம் தேதி நீர்மட்ட நிலவரம் வெளியா...