உடுமலை அருகே சின்னக்கரட்டில் கோவில் விழாவில் வழிபாடு செய்வதில் இரு தரப்பினரிடையே பிரச்சனை - ஒருதரப்பினர் சாலை மறியல்

உடுமலை தாசில்தார் சுந்தரம், துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெ.சுகுமாறன் உள்ளிட்ட அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் அனைத்து சமுதாயத்தினரும் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வது என முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து மறியலை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த ஜல்லிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சின்னக்கரடு அருகே வீர ஜக்கம்மாள் தேவி கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை திருவிழா வருகின்ற 9 மற்றும் 10-ம் தேதி இரண்டு நாட்களுக்கு நடைபெறுகிறது. ஊர் மக்கள் ஒன்று கூடி விழா எடுக்கும் இந்த கோவிலில் ஒரு சமுதாயத்தில் இரண்டாக பிரிந்த பிரிவினர் விழா சம்பந்தமாக சில கோரிக்கைகளை வலியுறுத்தி வந்தனர். இதனால் விழா கொண்டாடுவதில் சிக்கல்கள் ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து இன்று காலை உடுமலை தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் ப.சுந்தரம் தலைமையில் இன்று இரு தரப்பினரிடமும் தனித்தனியாகவும் ஒன்றாகவும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் மாலை வரையிலும் பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் ஆவேசமடைந்த ஒரு பிரிவினர் குழந்தைகளுடன் திடீரென நூலகம் அருகே உடுமலை- திருமூர்த்திமலை சாலையில் அமர்ந்து ஈடுபட்டனர்.



அதைத்தொடர்ந்து அங்கு வருகை தந்த உடுமலை தாசில்தார் சுந்தரம், துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெ.சுகுமாறன் உள்ளிட்ட அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தையில் நடத்தினர். அதில் அனைத்து சமுதாயத்தினரும் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம்செய்வது என முடிவு செய்யப்பட்டது. அத்துடன் இதுகுறித்து இன்று உடுமலை ஆர்.டி.ஓ ஜஸ்வந்த்கண்ணன் தலைமையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவது என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர். ஊர் சமுதாயத்தினர் ஏராளமானோர் திரண்ட இந்த நிகழ்வால் இன்று காலை முதல் மாலை வரையிலும் உடுமலை தாலுகா அலுவலகம் பகுதியில் பரபரப்பு நிலவி வந்தது. அதைத் தொடர்ந்து போலீஸ்பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...