கரும்புகடை ஆத்துப்பாலம் அருகே தீ விபத்து - தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் தீவிரம்

ஆற்றில் கொட்டி வைக்கப்பட்ட குப்பைகள், சருகுகள் ஆகியவற்றில் திடீரென இன்று தீப்பிடித்து எரியத்தொடங்கியது. பின்னர் அருகில் இருந்த மரம், செடிகளிலும் தீ வேகமாக பரவி வருவதால் அப்பகுதி புகைமண்டலம் போல் காட்சியளிக்கிறது.


கோவை: கோவை கரும்புகடை ஆத்துபாலம் அருகே ஆற்றில் கொட்டி வைக்கப்பட்ட குப்பைகள், சருகுகள் ஆகியவற்றால் திடீரென இன்று (மே.6) தீ விபத்து ஏற்பட்டது. பின் அருகில் இருந்த மரம் செடிகளில் திடீரென தீ பரவி வேகமாக தீப்பிடித்து எரிந்து வருகிறது.



இதனால் அப்பகுதி முழுவதும் புகைமூட்டமாய் காணப்பட்டது. ஆற்றில் கொட்டி வைக்கப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் மரம் செடிகளில் தீ பரவியதால் அப்பகுதி புகை மண்டலம் போல் காட்சியளிக்கிறது.

பின்னர் அப்பகுதி மக்கள் இதுகுறித்து அளித்த தகவலின் பேரில் அங்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...