வெள்ளகோவிலில் சிக்கன் கடையின் பூட்டை உடைத்து கைவரிசை - ரூ.50 ஆயிரம் பணத்துடன் பிடிப்பட்ட திருடன்

நாகப்பட்டினம் மாவட்டம் ஆலந்தூர் பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் என்ற வாலிபரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து சிக்கன் கடையில் திருடப்பட்ட ரூ.50 ஆயிரம் ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்து பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள வெள்ளகோவில் பகுதியில் இயங்கி வரும் பிரசித்திபெற்ற வீரக்குமார் கோவில் பின்புறம் உள்ள வீரக்குமார் சிக்கன் கடையில் கடந்த ஏப்ரல் 30ஆம்‌ தேதி இரவு மர்ம நபர் ஒருவர் பூட்டிருந்த கடையின் பூட்டை உடைத்து கடையில் இருந்த ரூ.50 ஆயிரம் ரொக்கப் பணத்தை திருடிச் சென்றுள்ளார்.

இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல் அதிகாலை கடைக்கு வந்த உரிமையாளர் மற்றும் வேலையாட்கள் கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனை அடுத்து கடையின் உரிமையாளர் வெள்ளகோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு வெள்ளகோவில் போலீசார் சிக்கன் கடையின் அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.



மேலும் நாகப்பட்டினம் மாவட்டம் ஆலந்தூர் பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் வயது 19 என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.



அவரிடம் இருந்து சிக்கன் கடையில் திருடப்பட்ட ரூ.50 ஆயிரம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டு கைது செய்யப்பட்ட மகேந்திரனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் கோவை சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...