வால்பாறை அருகே ஐயர்பாடி எஸ்டேட் பகுதியில் மின்சார கோபுரத்தின் மேல் ஏறி தொழிலாளி போராட்டம்

என் மீது எந்த தவறும் இல்லாதபட்சத்தில் எஸ்டேட் நிர்வாகம் சோக்காஸ் நோட்டீஸ் கொடுத்துள்ளதாக கூறி நிரந்தர தொழிலாளியாக பணியாற்றும் வீரமணி என்பவர் மின்சார கோபுரத்தின் மேல் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே ஐயர்பாடி எஸ்டேட் பகுதியில் மின்சார கோபுரத்தின் மேல் ஏறி தொழிலாளர் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டார்.ஐயர்பாடி எஸ்டேட் தேயிலைத் தோட்ட தொழிலாளராக வீரமணி 55 வயது என்பவர் நிரந்தர தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.

இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக தேயிலை தோட்டத்தில் வேலை செய்யும் பொழுது உடன் வேலை செய்த தனராஜ் என்பவரிடம் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.இது தொடர்பாக எஸ்டேட் நிர்வாகம் வீரமணி என்பவருக்கு சோக்காஸ் நோட்டீஸ் கொடுத்துள்ளது.



சோக்காஸ் நோட்டீஸ் வழங்கியதை அடுத்து என் மீது எந்த தவறும் இல்லை. நிர்வாகம் ஒரு தரப்பாக செயல்பட்டு வருகிறதுஎன்று கூறி இன்று காலை ஐயர்பாடி எஸ்டேட் பகுதியில் உள்ள உயர் மின்சார கோபுரத்தின் மேல் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதை தொடர்ந்து வால்பாறை காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர், தொழிலாளர் நலத்துறை அலுவலர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்துசமரசம் பேச்சு வார்த்தை நடத்தி அவரை மின்சாரக் கோபுரத்தின் மேல் இருந்து இறக்கினர்.

இந்த சம்பவம் குறித்து வால்பாறை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...