கோவை வெள்ளியங்கிரி மலையில் தொடரும் துயரம்: மேலும் ஒருவர் மூச்சுத் திணறி உயிரிழப்பு..!

திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த 10 பேர் மலை ஏற்றத்தில் ஈடுபட்டிருந்தபோது, ஒன்றாம் மலையை ஏறிக்கொண்டிருந்த புண்ணிய கோடி என்பவருக்கு உடல்நிலை கோளாறு ஏற்பட்டு உயிரிழந்தார்.


கோவை: கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் தென் கைலாயம் என அழைக்கப்படும் வெள்ளியங்கிரி கோவில் அமைந்து உள்ளது. ஏழு மலைகளை தாண்டி சுயம்பு வடிவில் இருக்க கூடிய சிவலிங்கத்தை தரிசிக்க ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து வருகின்றனர். 

பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில், மலையேற்றத்தின் போது சில பக்தர்களுக்கு உடல் உபாதை ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவது இங்கு வழக்கமான ஒன்றாக உள்ளது. இவ்வாண்டு பிப்ரவரி மாதம் முதல் மூச்சு திணறல், இருதய கோளாறு உள்ளிட்ட பிரச்சனைகளால் பல்வேறு மரணங்கள் ஏற்பட்ட நிலையில், ஒரே மாதத்தில் ஒன்பது பேர் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

நேற்று, 28.4.2024 ஆம் தேதி பிற்பகல் சுமார் 12 மணி அளவில் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 10 நபர்கள் அடிவாரத்தில் தரிசனம் முடித்து விட்டுசுமார் 12 மணிக்கு மலை ஏற துவங்கினர்.

அப்போது, ஒன்றாவது மலையில்,திடீரென புண்ணிய கோடி என்பவர் தனக்குவயிற்று வலிக்கிறது என்றும் கழிவறை செல்ல வேண்டும் என்று கூறி வாந்தி எடுத்து உள்ளார். உடன் இருந்தவர்கள், உடனே அவரை கீழே அழைத்து வந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆலந்துறை பகுதியில் உள்ள பூலுவபட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அவரை சோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக அறிவித்தனர். இது குறித்து ஆலந்துறை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவரது உடலை கைப்பற்றிய போலீசார் உடல்கூறு ஆய்வுக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்தில், திருப்பூர் மற்றும் சேலத்தை சேர்ந்த பக்தர்கள் இருவர் மலை ஏற்றத்தின் போது மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

வெள்ளிங்கிரி மலையில் தொடரும் உயிரிழப்புகளை தடுப்பதற்கு, அரசு உடனடியாக மருத்துவ முகாம்கள் அமைத்து முதலுதவி சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் மட்டும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...