ட்ரோன் மூலம் பயிர்களுக்கு பூச்சி மருந்து தெளிப்பது பற்றி வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவர்கள் விழிப்புணர்வு

ட்ரோன்களை கஸ்டமைஸ் செய்து தண்ணீரின் அளவை கண்காணிப்பதற்கும், பயிரின் வளர்ச்சியைக் கண்காணிப்பதற்கும் கூட பயன்படுத்த முடியும் என்று வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்தனர்.


கோவை: கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகம் மாணவர்கள் 9 பேர் கொண்ட குழு, ஸ்ரீராமலிங்கம் தலைமையில் தாராபுரம் ஒன்றியம் சத்திரம் கிராமத்தில் வேளாண்மை அனுபவப் பயிற்சியில் ஈடுபட்டனர். காவேரி அக்ரோ சர்வீசஸ், சத்திரம்‌, உதவியுடன் கோட்டமுத்தாம்பாளையம் கிராமத்தில் மாணவர்கள் ட்ரோன் மூலம் பயிர்களுக்கு பூச்சி மருந்து தெளிப்பு பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.



உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகளைத் தெளிப்பதற்கு மட்டுமின்றி, தண்ணீர் பாய்ச்ச மற்றும் விதைகளைப் பரப்ப என்று பல்வேறு காரணங்களுக்கு இப்போது ட்ரோன்கள் விவசாயத்தில் பயன்படுகின்றன. மேலும், இந்த ட்ரோன்களை கஸ்டமைஸ் (Customise) செய்து தண்ணீரின் அளவை கண்காணிப்பதற்கும், பயிரின் வளர்ச்சியைக் கண்காணிப்பதற்கும் கூட பயன்படுத்த முடியும்.‌



இன்றைய காலகட்டத்தில் வேலையாட்கள் பற்றாக்குறை குறித்த நேரத்தில் மருந்து தெளிக்க முடியாத நிலையை இந்த ட்ரோன் தொழில்நுட்பம் நீக்குகிறது. இந்த விழிப்புணர்வின் மூலம் கிராமத்து விவசாயிகள் பயனடைந்தனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...