குளத்துப்பாளையம் பகுதியில் போதைப்பொருள் மற்றும் கஞ்சா வைத்திருந்த 4 பேர் கைது

போதைப்பொருள் மற்றும் கஞ்சா வைத்திருந்ததாக குனியமுத்தூர் விஜயலட்சுமி மில் பகுதியைச் சேர்ந்த கிஷோர் குமார், ஜெ.ஜெ.நகரை சேர்ந்த கவுதம், சென்னையை சேர்ந்த கோகுல், திருவனந்தபுரம் திருமலையை சேர்ந்த விஷ்ணு உதயா ஆகியோரை போலீசார் கைது சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவை குனியமுத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ஆகியோர் ஏப்ரல்.25ம் தேதி அன்று கோவைப்புதூர், குளத்துப்பாளையம் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்குள்ள சோப் கம்பெனி அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 4 பேரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 7.5 கிராம் போதை பொருள், 170 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.

விசாரணையில் அவர்கள் குனியமுத்தூர் விஜயலட்சுமி மில் பகுதியைச் சேர்ந்த கிஷோர் குமார் (வயது 27), ஜெ.ஜெ.நகரை சேர்ந்த கவுதம் (வயது 27), சென்னை கோகுல் (வயது 23), திருவனந்தபுரம் திருமலையை சேர்ந்த விஷ்ணு உதயா ( வயது 24) என்பது தெரியவந்தது.

பின்னர் அவர்களிடமிருந்த போதைப் பொருள், கஞ்சா, 3 செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நான்கு பேரையும் கோவை சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...