உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா - இரவை பகலாக்கிய வானவேடிக்கை நிகழ்ச்சி

மாகாளியம்மன் சிம்ம வாகனத்திலும், மாரியம்மன் சூலத்தேவருடன் குதிரை வாகனத்திலும் பரிவேட்டைக்கு எழுந்தருளினர். அப்போது நடைபெற்ற ஊர்வலத்தின் போது நிகழ்த்தப்பட்ட வானவேடிக்கை நிகழ்ச்சிகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுளித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த 9-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் கடந்த 25ம் தேதி நடைபெற்றது.



இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர். அதன் தொடர்ச்சியாக நேற்று இரவு அம்மன் பரிவட்டைக்கு எழுந்தருளுதல் நிகழ்ச்சியும், அதை தொடர்ந்து குட்டை திடலில் வான வேடிக்கையும் நடைபெற்றது. முன்னதாக மாரியம்மன் சூலத்தேவர் மாகாளி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.



அதைத் தொடர்ந்து மாகாளியம்மன் சிம்ம வாகனத்திலும் மாரியம்மன் சூலத்தேவருடன் குதிரை வாகனத்திலும் பரிவேட்டைக்கு எழுந்தருளினார்கள். கோவில் வளாகத்தில் தொடங்கி உடுமலை நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் குட்டை திடலை அடைந்தது.



அதைத் தொடர்ந்து அம்மன் முன்பாக வான வேடிக்கை நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்றது. அங்கு தயார் நிலையில் இருந்த வெடிகள் விதவிதமான வண்ணங்களில் வெவ்வேறான ஓசையுடன் வெடித்து சிதறியது.



இதை பொதுமக்கள் நேரிலும், வீடுகளின் மொட்டை மாடிகளில் நின்றும் ஆர்வத்தோடு கண்டு களித்தனர். மேலும் கண்கவர் பல ரகங்களில் வெடிக்கப்பட்ட பட்டாசுகள் இரவை பகல் ஆக்கியது. வான வேடிக்கை நிகழ்வையொட்டி உடுமலை போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இ...

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) மின் பராமரிப்பு: 11 பகுதிகளில் மின்தடை

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை ஜூலை 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் ந...