கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பத்திரிகையாளர்கள் பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கினர்.

கோவை மாவட்ட பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்க இன்று ஏற்பாடு செய்யபட்டது.எப்பொழுதும் இல்லாத அளவு இந்த ஆண்டு கோவை மாவட்டத்தில் 102 டிகிரி பேரன்ஹீட் அளவு வெயிலால் பொதுமக்கள் பெருதும் அவதி பட்டு வருகின்றனர்.



இதனை கருத்தில் கொண்டு கோவை மாவட்ட பத்திரிகையாளர்கள் நீர் மோர் வழங்க ஏற்பாடு செய்திருந்தனர். குறை தீர்ப்பு முகாம் நாளான இன்று இங்கு வந்தவர்களுக்கு நீர் மோர் வழங்கபட்டது.இதனை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் துவக்கி வைத்தார். 60லிட்டர் தயிர் கொண்டு 600 லிட்டர் நீர் மோர் பொதுமக்களுக்கு வழங்கபட்டது. 



பத்திரிகையாளர்களின் இந்த செயலுக்கு பொதுமக்கள் வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்தவர்கள் கோடை முடியும் வரை இச்சேவையை தொடருமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

Newsletter

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...