கோவையில் 1192 மது பாட்டில்கள் மற்றும் ரூ.1.07 லட்சம் பறிமுதல் - 11 பேர் கைது

வடவள்ளி வீரகேரளம், போத்தனூர், சுந்தராபுரம், சிங்காநல்லூர், பீளமேடு ஆகிய பகுதிகளில் மாநகர போலீசாரும், மதுவிலக்கு அமல்பிரிவு போலீசாரும் நடத்திய சோதனையில் மொத்தம் 11 பேர் கைது செய்யப்பட்டு, 1192 மதுபாட்டில்கள் மற்றும் ரூ. 1.07 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.


கோவை: கோவை மக்களவை தேர்தலையொட்டி கடந்த 17,18,19 ஆகிய நாட்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இதனை பயன்படுத்தி சிலர் மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதனை தொடர்ந்து மாநகர போலீசார், மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் கோவை மாநகரில் நேற்று (ஏப்ரல்.19) பல்வேறு இடங்களில் சோதனை செய்தனர்.

அப்போது வடவள்ளி வீரகேரளம் டாஸ்மாக் கடை அருகே சென்ற போது ஒரு கும்பல் போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓடினர். போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து ஒரு குவார்ட்டர் பாட்டில் ரூ.250 முதல் 300 வரை விற்றது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பார் சப்ளையர்கள் சிவகங்கையை சேர்ந்த ராஜா(28), மருதுபாண்டி(27), விருது நகரை சேர்ந்த தமிழ்செல்வன்(27), புதுக்கோட்டையை சேர்ந்த செபாஸ்டியன்(42), கிருஷ்ணன்(41), ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 844 மது பாட்டில்கள் மற்றும் ரூ.1.07 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

இதேபோல, போத்தனூர், சுந்தராபுரம், சிங்காநல்லூர், பீளமேடு மற்றும் மது விலக்கு அமல்பிரிவு போலீசார் புதுக்கோட்டையை சேர்ந்த விக்னேஷ்வரன்(31), வீரசேகரன்(42), அன்புகுமார்(44), மகாலிங்கம்(27), கடலூரை சேர்ந்த சுகுமார்(29), கோவை பிள்ளையார் புரத்தை சேர்ந்த அன்புதுரை(32), ஆகிய 6 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து 348 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தம் போலீசார் 11 பேரை கைது செய்து 1192 மதுபாட்டில்கள் மற்றும் ரூ. 1.07 லட்சத்தை பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...