கோடந்தூர் பகுதியில் அரசு பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடி மையத்தில் மலைவாழ் மக்கள் வாக்களிப்பு

தேர்தல் சமயத்தில் மட்டும் வரும் அரசியல் பிரமுகர்கள், பழமையான வீடுகளை புதுப்பித்து தருகிறோம், புதிய வீடுகள் கட்டித் தருகிறோம், அடிப்படை வசதிகளை செய்து தருகிறோம் என வாக்குறுதி தந்துவிட்டு தேர்தல் முடிந்ததும் கண்டுகொள்வதில்லை என மலைவாழ் மக்கள் குற்றம்சாட்டினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட கோடந்தூர், ஆட்டுமலை, பொற்பார்க்குடி உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட மலை கிராமங்களுக்கு கோடந்தூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் சாவடி அமைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை முதல் மலைவாழ் மக்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று தனது வாக்கினை பதிவு செய்தனர்.



பின்னர் மலைவாழ் மக்கள் கூறும் பொழுது, கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாகவே கோடந்தூர் மலை கிராமத்தில் வசித்து வருகின்றோம். தேர்தல் சமயத்தில் அரசியல் பிரமுகர்கள் நேரில் வருகை புரிந்து பழமையான வீடுகள் புதுப்பித்து தருகிறோம். புதிய வீடுகள் கட்டித் தருகிறோம். குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தருகிறோம் என வாக்குறுதிகள் தந்துவிட்டு செல்கின்றனர்.

ஆனால் தேர்தல் முடிந்ததும் எதுவும் செய்து தரப்படுவதில்லை. இருப்பினும் மலைவாழ் மக்கள் ஆகிய நாங்கள் இன்று எங்கள் ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளோம் என்று தெரிவித்தனர். எனவே இனிவரும் காலங்களில் கோடந்தூர் உள்ளிட்ட மலை கிராமங்களில் மலை வாழ் மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டுமென தெரிவித்தனர்.

Newsletter

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...