வால்பாறையில் மேளதாளங்களுடன் திமுகவினரின் இறுதி கட்ட பிரச்சாரம் நிறைவு

திமுக கட்சியினர் காந்தி சிலை வளாகத்தில் இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அதேபோல் அதிமுகவினர் புதிய பேருந்து நிலையம் பகுதியிலும், பாரதிய ஜனதா கட்சியினர் அண்ணா திடல் பகுதியிலும் இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.


கோவை: நாடாளுமன்றத் தேர்தல் வருகிற 19-ம் தேதி நடக்க இருக்கும் நிலையில் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின்படி நேற்று மாலை 6 மணி அளவில் கட்சியினர் வாக்கு சேகரிக்கும் பிரச்சாரம் முடிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் திமுக, அதிமுக, பிஜேபி போன்ற கட்சிகள் வால்பாறையில் திமுக கட்சியினர் சுமார் 300 க்கும் மேற்பட்டவர்கள் காந்தி சிலை வளாகத்திலும், இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அதேபோல் அதிமுகவினர் புதிய பேருந்து நிலையம் பகுதியிலும், பாரதிய ஜனதா கட்சியினர் அண்ணா திடல் பகுதியிலும் இறுதி கட்ட தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இதில் திமுக நகரச் செயலாளர் குட்டி என்ற சுதாகர் தலைமையில் காந்தி சிலை வளாகத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட திமுக கட்சியினர் இறுதி கட்ட வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.



இதில் முன்னாள் நகர மன்ற தலைவர் கோ.கணேசன், திமுக ஆட்சியின் சாதனைகளைப் பற்றியும் திமுக கட்சியை வால்பாறை மக்களுக்கு செய்த சாதனைகளைப் பற்றியும், மகளிர் பேருந்து இலவச பேருந்து மற்றும் மகளிர் உதவித்தொகை மற்றும் பல்வேறு திட்டங்களை வலியுறுத்தி வாக்கு சேகரித்தனர்.

கட்சியினர் மேள தாளங்கள் தட்டி டான்ஸ் ஆடி இறுதி கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு நிறைவு செய்தனர். இதில் நாங்க நகராட்சி நகர மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி, துணைத்தலைவர் செந்தில்குமார், திப்பம்பட்டி ஆறுச்சாமி, ஜே.பாஸ்கர், செல்வம், மகுடீஸ்வரன், வார்டு உறுப்பினர்கள் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர். இதில் காவல்துறையினர் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு 6 மணி அளவில் பிரச்சாரம் நிறைவு பெற்றது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...