உடுமலையில் என்.ஆர்.சி மதுபான கூடத்தை அகற்றக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

என்.ஆர்.சி மதுபான கூட்டத்தில் இருந்த நாற்காலிகள், தண்ணீர் கேன்கள் மற்றும் பெயர் பலகையை அடித்து நொறுக்கி சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை தாராபுரம் சாலையில் நான்காவது வார்டு யூ எஸ்.எஸ்.காலனி குடியிருப்புக்கு மிக அருகாமையில் என்.ஆர்.சி மதுபானக்கூடம் செயல்பட்டு வருகின்றது. இந்த மதுபான கூடத்தில் மது அருந்தும் குடிமகன்கள் அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் தினம் தோறும் சிறுநீர் கழிப்பது, பெண்களை தகாத வார்த்தையில் திட்டி கொண்டு இருந்தனர்.

இந்த நிலையில் இன்று மதுபான கூடத்தில் மது அருந்திவிட்டு வந்த நபர் அருகில் உள்ள வீட்டிற்கு முன்பு சிறுநீர் கழித்தார். அந்தநபரை அப்பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் கேட்கும்போது இருவருக்கும் இடையேதகராறு ஏற்பட்டதாக கூறபடுகின்றது. இது குறித்து என்.ஆர்.சி மதுபான கூடத்தில் பெண்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் கேட்டபோது பார் ஊழியர்களுக்கும் பெண்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.



இதில் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் தனியார் மதுபான கூடத்திற்கு சென்று அங்கிருந்த நாற்காலிகள், தண்ணீர் கேன்கள் மற்றும் பெயர் பலகையை அடித்து நொறுக்கினர். பின்னர் உடுமலை தாராபுரம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு வந்த உடுமலை டிஎஸ்பி தலைமையில் சுகுமாறன் தலைமையில் காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் தனியார் மதுபான கடையை உடனே இடமாற்றம் செய்ய வேண்டும் இல்லை என்றால் கலைய மாட்டோம் என கூறிய நிலையில் வலுக்கட்டாயமாக பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட பெண்கள் ஆண்களை காவல்துறையினர் கைது செய்தால் பரபரப்பு ஏற்பட்டது. உடுமலையில் தனியார் மதுபான கடையை அகற்றக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஆண்கள், பெண்கள் ஐம்பதுக்கு மேற்பட்டோரை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்த சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...