இந்தியா கூட்டணிக்கு முழு ஆதரவு தெரிவித்த கோவை இஸ்லாமிய கூட்டமைப்பினர்  -  தமிழக முதல்வருடன் சந்திப்பு..!

வரும் நாடாளுமன்ற தேர்தலில், இந்தியா கூட்டணிக்கு முழு ஆதரவு தெரிவித்து, கோவை இஸ்லாமிய கூட்டமைப்பினர் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினிடம் ஆதரவு கடிதத்தை வழங்கினர்.


கோவை: எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில், கோவை இஸ்லாமிய கூட்டமைப்பினர் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து முதல்வரிடம் ஆதரவு கடிதத்தை வழங்கினர்.

இந்திய கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கடந்த 12 ஆம் தேதி தமிழக முதல்வர் மற்றும் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கோவை வந்திருந்தார். 

அப்போது அவரை சந்தித்த கோவையை சேர்ந்த இஸ்லாமிய கூட்டமைப்பினர் அவர்களது கோரிக்கையை ஏற்று சிறைவாசிகளை நிபந்தனை இன்றி விடுவித்த முதல்வருக்கு நன்றி கூறி பல்வேறு கோரிக்கைகளையும் முன் வைத்தனர். 



இது குறித்து தெரிவித்துள்ள இஸ்லாமிய கூட்டமைப்பினர்,

ஜனநாயகத்தின் மாண்புகளை காக்கவும், அனைத்து தரப்பு மக்களின் உரிமைகளை காக்கவும், சிறுபான்மை சமூக மக்களின் நலனை மீட்கவும், மதவாத சக்திகளிடம் இருந்து இந்தியாவை மீட்டெடுக்கவும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு முழு ஆதரவு அளிக்க உள்ளோம். 

இந்தியாவின் மிக சிறந்த மனிதநேய நடவடிக்கையாக 

2021 ஆம் ஆண்டு, கோவை இஸ்லாமிய கூட்டமைப்பு முன்வைத்த முஸ்லீம் சிறைவாசிகள் விடுதலை கோரிக்கையை ஏற்று, எந்தவித மத பாகுபாடும் இல்லாமல் சிறைவாசிகள் விடுதலை செய்த திமுக அரசின் மனிதநேய நடவடிக்கைக்கு கோவை இஸ்லாமியகூட்டமைப்பு சார்பில் முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

மத்தியில் மனிதநேய மக்கள் ஆட்சி அமைய, கோவை கூட்டமைப்பின் முயற்சிகள் மற்றும் களப்பணிகள் குறித்து முதல்வரிடம் தெரிவித்து, 

சிறுபான்மை சமூக மக்களின் பல்வேறு கோரிக்கைகளை முன்வைக்கப்பட்டது. 



அதன்படி, இந்தியா கூட்டணி வேட்பாளர்களான - கோவை தொகுதி திமுக வேட்பாளர்கணபதி ராஜ்குமார் மற்றும் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமிக்கு ஆதரவு வழங்குவதற்கான, ஆதரவு நிலைப்பாடு கடிதம் முதல்வரிடம் வழங்கப்பட்டது. 

கடிதத்தை பெற்றுக் கொண்ட முதல்வர்,கோவை இஸ்லாமிய கூட்டமைப்பின் ஆதரவு நிலைப்பாட்டுக்கு நன்றிகளை தெரிவித்தார்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...