விருகல்பட்டி கூட்டுறவு வங்கியில் முறைகேடு – நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கபோவதாக விவசாயிகள் அறிவிப்பு

தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் விருகல்பட்டி ஊராட்சியில் கருப்பு கொடி ஏற்றி, தேர்தலை புறக்கணிக்க போவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே விருகல்பட்டி ஊராட்சியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் முறைகேட்டில் ஈடுபட்ட தலைவர், இயக்குனர்கள், செயலர் உதவி செயலாளர் ஆகியோர்கள் மீது நடவடிக்கை எடுக்க கடந்த சில மாதங்களுக்கு முன்பு விருகல்பட்டி மற்றும் ராமச்சந்திராபுரம் உட்பட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தொடக்க வேளாண்மை அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்புப் போராட்டம், ஆடு மாடுகளுடன் போராட்டம், சாலை மறியல் என பல்வேறு கட்ட போராட்டங்கள் செய்தும் தற்பொழுது வரை எந்த நடவடிக்கையும் தமிழக அரசு எடுக்கப்படவில்லை.



இதனால் தமிழக அரசை கண்டித்தும், மறு பயிர் கடன் வழங்காத்தை கண்டித்தும், முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் விருகல்பட்டி ஊராட்சியில் கருப்பு கொடி ஏற்றினர். பின்னர் தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் தெரிவித்தனர். அப்போது தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் இடப்பட்டன.

Newsletter

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 30ஆம் தேதி நீர்மட்ட நிலவரம் வெளியா...

கோவை முன்னாள் படைவீரர்கள் அலுவலகத்தில் ஆய்வு; நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் சரத்குமார்

கோவை முன்னாள் படைவீரர்கள் அலுவலகத்தில் தமிழ்நாடு மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார் ஆய்வு மேற்கொண்டு, முன்னாள் ப...

வார்டு வளர்ச்சிப் பணிகள் புறக்கணிப்பு குற்றச்சாட்டு; கோவையில் தி.மு.க கவுன்சிலர் தர்ணா

கோவை அருகே தென்கரை பேரூராட்சி மன்றக் கூட்டத்தின் போது, தனது வார்டில் வளர்ச்சிப் பணிகள் மற்றும் தூய்மைப் பணிகள் புறக்கணிக...

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...