அரிசிக்கு ஜிஎஸ்டி போட்டவர் மோடி அதற்கு உறுதுணையாக இருந்தவர் எடப்பாடி பழனிச்சாமி - வெள்ளகோவிலில் திமுக வேட்பாளர் பிரகாஷ் புகார்

எதிரியாக இருக்கலாம், ஆனால் துரோகியாக இருக்கக் கூடாது. தற்போது அதிமுகவில் இருப்பவர்கள் அனைவரும் துரோகிகள் என்று ஈரோடு நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பிரகாஷ் விமர்சனம் செய்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள வெள்ளகோவில் நகராட்சிக்குட்பட்ட அறிவொளி நகர் பகுதியில் ஈரோடு நாடாளுமன்ற திமுக வேட்பாளர் பிரகாஷ் திறந்த வெளி வாகனத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதில் வெள்ளகோவில் நகர திமுக செயலாளர் சபரி முருகானந்தம் மற்றும் திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



இதில் ஈரோடு நாடாளுமன்ற திமுக வேட்பாளர் பிரகாஷ் கூறுகையில், அரிசிக்கு ஜிஎஸ்டி வரி போட்டவர் மோடி. அதற்கு உறுதுணையாக இருந்தவர் எடப்பாடி பழனிச்சாமி. ஜெயலலிதா இருக்கும்போது கையெழுத்து போட முடியாது என மறுத்துவிட்டார். மோடியா லேடியா உன்னை ஒரு கை பார்க்கிறேன் என கூறியதாக தெரிவித்தார்.

ஜெயலலிதா இறந்தவுடன் எடப்பாடி பழனிச்சாமி அனைத்திற்கும் கையெழுத்து போட்டு விட்டார். எதிரியாக இருக்கலாம் துரோகியாக இருக்கக் கூடாது. தற்போது அதிமுகவில் இருப்பவர்கள் அனைவரும் துரோகிகள். மேலும் அறிவொளி நகர் பகுதியில் பேருந்து நிற்காமல் செல்வதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். அதற்கு ஈரோடு நாடாளுமன்ற திமுக வேட்பாளர் நீங்கள் அதிமுக கவுன்சிலரை தேர்ந்தெடுத்துள்ளீர்கள். அது நான் தவறு என சொல்லவில்லை அவர் சொன்னால்தான் நிறுத்துவார்கள். இல்லையென்றால் நீங்கள் ஒன்றிணைந்து மனுவாக எழுதி எங்களது மாவட்டச் செயலாளரிடம் கொடுங்கள் பேருந்து நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...