திமுக தேர்தல் வாக்குறுதியாக மகாலட்சுமி திட்டத்திற்கு வருடம் ரூ.1 லட்சம் நிதி வழங்கப்படும் - வெள்ளகோயிலில் திமுக வேட்பாளர் பிரச்சாரம்

தேர்தல் வாக்குறுதியாக இந்திய கூட்டணி வெற்றி பெறும் பட்சத்தில் ஏழை எளிய குடும்பங்களின் அத்தியாவசிய செலவுகளில் ஒன்றான எரிவாயு கேஸ் சிலிண்டர் விலை ரூபாய் 500 ஆக குறைக்கப்படும் என்று திமுக வேட்பாளர் பிரகாஷ் தெரிவித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த வெள்ளகோயில் நகர பகுதிகளில் இன்று ஈரோடு நாடளுமன்ற திமுக வேட்பாளர் பிரகாஷ்பொதுமக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்டார். அதிகாலை 6 மணி அளவில் துவங்கிய தேர்தல் பிரச்சாரம் வார்டு வாரியாக வெள்ளகோவில் பகுதியில் உள்ள 21 வார்டுகளிலும் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

இந்நிகழ்விற்கு வெள்ளகோயில் நகர செயலாளர் சபரி எஸ் முருகானந்தம் தலைமை தாங்கினார். திருப்பூர் தெற்கு மாவட்ட நான்காம் மண்டல தலைவர் இலா பத்மநாபன் முன்னிலை வைத்தார். களத்தில் திமுக வேட்பாளர் பிரகாஷ் பேசியதாவது, வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தலில் முன்னிட்டு இன்று வெள்ளகோவிலில் தேர்தல் பிரச்சாரத்தை துவங்கி உள்ளோம். தேர்தல் வாக்குறுதியாக இந்திய கூட்டணி வெற்றி பெறும் பட்சத்தில் ஏழை எளிய குடும்பங்களின் அத்தியாவசிய செலவுகளில் ஒன்றான எரிவாயு கேஸ் சிலிண்டர் விலை ரூபாய் 500 ஆக குறைக்கப்படும்.



மேலும் சுமார் 20 வருடங்களுக்கு முன்பு விற்பனை செய்யப்பட்ட மதிப்பில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ரூபாய் 70 க்கு விற்பனை செய்யப்படும். மகளிருக்கான முக்கிய திட்டமாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மகாலட்சுமி திட்டம் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். திட்டத்தின் மூலம் பெண்களுக்கு வருடம் ரூபாய் ரூ. 1 லட்சம் வரை நிதி உதவி வழங்கப்படும்.

ஏற்கனவே உள்ள மகளிர் உரிமை தொகை திட்டம் அடுத்து ஆட்சிக்கு வரும் பட்சத்தில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 1500 ஆக கூட வழங்கும் வாய்ப்புள்ளது. மேலும் பல விதமான திட்ட உதவிகளையும் அனைத்து பஞ்சாயத்து ஊராட்சி,நகராட்சி மாநகராட்சி பகுதிகளில் வழங்கப்பட்டது. மேலும் வெள்ள கோயிலுக்கு தேவையான அனைத்து வசதிகளும் கண்டிப்பாக நிறைவேற்றி தரப்படும் எனவும் பிரச்சாரம் மேற்கொண்டார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...