தமிழ்நாட்டு மக்கள் நலன் பற்றி சிந்திக்கும் ஒரே கட்சி அதிமுக தான்- காங்கேயத்தில் அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் பேச்சு

கலைஞர் கருணாநிதி சாராயத்தை வைத்து இந்த தலைமுறையை காலி செய்தார். அவர்களுடைய மகன் ஸ்டாலின் வந்து அடுத்த தலைமுறையை போதைப்பொருள் மற்றும் கஞ்சாவை வைத்து காலி செய்து வருகிறார் என அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் விமர்சித்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் நகராட்சிக்கு உட்பட்ட திருவிக நகர் மற்றும் ஏசி காலனி பகுதிகளில் ஈரோடு நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் இன்று காலை 6 மணி முதல் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதிமுக காங்கேயம் நகர செயலாளர் வெங்கு ஜி. மணிமாறன் தலைமையில் நகர பொருளாளர் கந்தசாமி முன்னிலையில் மாவட்ட பொருளாளர் கிஷோர் குமார் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் ஈரோடு அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் ஆற்றல் அசோக் குமார் கூறுகையில், இரட்டை இலையும், அதிமுகவும் இருக்கும் வரை தமிழ்நாட்டில் மக்கள் நலன் பற்றி சிந்திக்கும் ஒரே கட்சி அதிமுக தான் என்றும், இதற்கு நேர் மாறாக இருக்கும் மக்கள் விரோத ஆட்சி திமுக அரசு என்றும், இதுவரை எந்த மக்கள் நல திட்டங்களையும் செய்யவில்லை. புரட்சித்தலைவி அம்மா ஆட்சியிலும் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியிலும் செயல்படுத்தப்பட்ட எந்த நலத்திட்டங்களையும் திமுக அரசு செயல்படுத்தவில்லை.



தமிழகத்தில் சாராய ஆலைகள் அதிக அளவில் திமுக இடம் தான் உள்ளது. அதனால் மதுக்கடைகளை மூடுவதாக கூறிவிட்டு அதிக அளவில் திறந்து வைத்துள்ளனர். கலைஞர் அவர்கள் சாராயத்தை வைத்து இந்த தலைமுறையை காலி செய்தார்கள். அவர்களுடைய மகன் ஸ்டாலின் வந்து அடுத்த தலைமுறையை போதைப்பொருள் மற்றும் கஞ்சாவை வைத்து காலி செய்து வருகிறார். மேலும் விலைவாசி வியர்வை கட்டுப்படுத்த திமுக அரசு தவறிவிட்டதாகவும் தெரிவித்தார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இ...

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) மின் பராமரிப்பு: 11 பகுதிகளில் மின்தடை

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை ஜூலை 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் ந...