எம்ஜிஆர், ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்கள் முடக்கம் - தாராபுரத்தில் அதிமுக வேட்பாளர் புகார்

மாணவர்களுக்கு இலவச மடிக்க கணினி, தாலிக்கு தங்கம், இலவச ஸ்கூட்டி திட்டம் மற்றும் திருமண உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தி வந்தது என்று அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் பேசினார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட காமராஜபுரம் பூளவாடி பிரிவு அரசமரம் டி எஸ் கார்னர் மற்றும் புது பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று அதிமுக ஈரோடு நாடாளுமன்ற வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் திறந்த வெளி வாகனத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது தாராபுரம் அதிமுக நகர செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.



ஈரோடு நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் கூறுகையில், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் திமுக அரசு முடக்கிவிட்டது.

இதில் மாணவர்களுக்கு இலவச மடிக்க கணினி, தாலிக்கு தங்கம், இலவச ஸ்கூட்டி திட்டம் மற்றும் திருமண உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தி வந்தது. திமுக அரசு ஏற்றவுடன் மூன்று வருடங்களில் அனைத்து திட்டங்களையும் முடக்கிவிட்டது. ஆனால் தற்போது பள்ளி மாணவர்களை சீரழிக்கும் வகையில் மாணவர்களுக்கு தேவையான மிட்டாய்களில் போதை பொருள்களை கலந்து விற்பனை செய்து வருகின்றனர். அதேபோல் பள்ளி குழந்தைகளின் எதிர்காலத்தை சீரழித்து பணம் சம்பாதிக்க வேண்டுமா என கூறினார். இதை தொடர்ந்து திமுக நிர்வாகி கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தது வெட்ட வெளிச்சமாக தெரிந்துள்ளது.



மேலும் லாட்டரி சீட்டுகள் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தடை விதித்தார். ஆனால் திமுக அரசு செயல்படுத்தி வருகிறது. 650 கோடியை லாட்டரி நிறுவன அதிபர் கட்சி நிதியாக வழங்கியுள்ளார். இந்த பணம் யாருடையது அனைத்துமே உங்களுடையது. நீங்கள் வாங்கும் ஐந்து ரூபாய், பத்து ரூபாய் லாட்டரி சீட்டுகள் அனைத்தும் லாட்டரி சீட்டு நிறுவனத்திற்கு சென்று சேர்கிறது. ஆனால் எதுவும் விழுகாது என்று பேசினார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...